புதுதில்லி:
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, ஆம் ஆத்மி கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ், இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஜனநாயகத்தில் மக்கள் அளிக் கும் தீர்ப்புதான் சக்தி வாய்ந்தது. இந்திய மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். பாஜகவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். எதிர்கால ஆட்சி நன்றாக அமைய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருப்பதுடன், “இந்த முறையாவது மோடி நல்லது செய்வார் என்று நம்புகிறோம்” என்றும் பரத்வாஜ் குறிப்பிட்டுள்ளார்.தில்லியில் பாஜக சார்பில் போட்டியிட்ட 7 வேட்பாளர்களில், 3 பேர் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.