புதுதில்லி:
மத்தியப்பிரதேச பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் அனில்குமார் சவுமித்ரா, கடந்த ஆண்டு மே மாதம் மகாத்மா காந்தி பற்றி தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.“காந்தி தேசத்தின் தலைவர்தான். ஆனால், இந்திய தேசத்திற்கு அல்ல; பாகிஸ்தான் தேசத்திற்குத் தலைவர்.இந்த நாட்டில் அவரைப்போன்று கோடிக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். சிலர்மதிப்பு உடையவர்கள். சிலர்மதிப்பற்றவர்கள்” என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
சவுமித்ரா-வின் இந்த பதிவு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சவுமித்ரா-வின் கருத்துக்கள் பாஜக சித்தாந்தங்களுக்கும் கொள்கைகளுக்கும் மாறாகஇருப்பதாகவும், அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்குவதாகவும் அறிவித்தது.இந்நிலையில்தான், சவுமித்ராவுக்கு இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான - இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் கல்வியை வழங்கும்ஐ.ஐ.எம்.சி (Indian Institute of Mass Communication - IIMC) நிறுவனத்தின் பேராசிரியர் பதவி வழங்கி கவுரவித்துள்ளது.இந்தப் பணியிடத்திற்கு 60-க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் கலந்து கொண்டதாகவும், அவர்களில் சவுமித்ரா தேர்வுசெய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சவுமித்ராவும் கடந்த அக்டோபர்26-ஆம் தேதியே பேராசிரியர் பதவியையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் சுரண்டல்கள் நடப்பதாக ‘சர்ச் கே நார்க்மே நன் கா ஜீவன்’ (Church ke nark me nun ka Jeevan)என்ற கட்டுரையை எழுதியதற்காக, 2013-ஆம் ஆண்டிலும் சவுமித்ரா பாஜக-விலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.