tamilnadu

img

அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா ஒழிந்து விடும்... இது பாஜக பெண் எம்.பி.யின் ‘ஆராய்ச்சி’

புதுதில்லி:
கொரோனாவுக்கு சர்வதேச மருத்துவ உலகம் மருந்து கண்டுபிடித்ததோ,இல்லையோ; இந்தியாவில் பாஜக,ஆர்எஸ்எஸ் சங்-பரிவார் கூட்டம் தினமும் ஒரு மருந்தை ‘கண்டுபிடித்து’ கூறிவருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு துவங்கிய நாளிலிருந்து, “கை தட்டினால் கொரோனா ஓடிவிடும்... விளக்கேற்றினால் கொரோனா மறைந்து விடும்.. வெயிலில் 2 மணிநேரம் உட்கார்ந்தால் கொரோனா அழிந்து விடும்.. பசுமாட்டு மூத்திரத்தில் கொரோனா தடுப்பு மருந்து இருக்கிறது..” என்றுசங்-பரிவாரங்கள் கூறும் கதைகளைக்கேட்டு மருத்துவர்களே மயக்கம் போட்டு வருகின்றனர்.

கடைகள் பூட்டிக் கிடக்கும் நேரத் தில், கொரோனா மைசூர் பாகு, கொரோனாலட்டு, கொரோனா பானி பூரி, கொரோனா டீ, கொரோனா சாம்பார் என்றும் கதைகேட்போரின் நாக்கிலும் சுவையூற வைத்தனர்.அண்மையில், ‘பாபிஜி அப்பளம்’ சாப்பிட்டால் கொரோனா எதிர்ப்பு சக்திஉண்டாகும் என்று மத்திய பாஜகஅமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால்புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட, அதெல்லாம் தேவையில்லை. அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினாலே போதும், கொரோனா ஒழிந்து விடும் என்று பாஜக-வைச் சேர்ந்த மத்தியப்பிரதேச சபாநாயகர் ராமேஸ்வர் சர்மா கூறினார்.

இந்நிலையில், போபால் தொகுதி பாஜக எம்.பி.யும், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான பிரக்யா சிங் தாக்குர், “ராமர்கோயிலுக்கு பூமி பூஜை நடைபெறவுள்ள ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை, தினமும் 5 வேளை அனுமன் சாலீஸா திருமந்திரத்தை கூறினாலேயே, கொரோனா ஒழிந்து விடும்” என்று டைமிங்காக ஒரு கண்டுபிடிப்பை வெளி யிட்டு, சிரிப்பு காட்டியுள்ளார்.

;