tamilnadu

img

எம். சிவசங்கரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை...

கொச்சி:
தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் எம் சிவசங்கரை கைது செய்ய உயர் நீதிமன்றம் அக். 23 வரை தடை விதித்துள் ளது. 

சிவசங்கரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அசோக் மேனன் இந்த உத்தரவை பிறப்பித்தார். அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது ஜாமீனை 23 ஆம் தேதி வரை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்தால் ஒன்றாக பரிசீலிக்கப்படும். வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற சுங்கத்துறை யின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. தான் அரசியல் விளை யாட்டுக்கு பலியாகியிருப்பதாக நீதிமன்றத்தில் சிவசங்கர் கூறினார். பல்வேறு ஏஜென்சிகள் 90 மணி நேரம் விசாரித்த போதிலும், இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படு கிறது. இந்த மாதம் 15 ஆம் தேதி அமலாக்கத்துறையின் முன்பு விசாரணைக்கு ஆஜரானேன். 16 ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைந்த நிலையில் 5.50 மணிக்கு, சுங்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் செல்ல வந்தனர். 

ஒரு வழக்கில் கைது செய்ய தடை விதிக்கப்பட்டபோது வெள்ளிக்கிழமை மாலையே விசாரிக்கவந்தது தவறான எண்ணத்துடன் சட்டத்தை தவறாக பயன்படுத்துவ தாகும் என சிவசங்கர் கூறினார். தொடர்ந்து கேள்வி கேட்பதில் சோர்வடைந்துள்ளதாகவும், மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிவசங்கர் கூறினார்.