tamilnadu

img

கனரக வாகன ஓட்டுநர் உரிமம்: கல்வித் தகுதி நீக்கப்பட வாய்ப்பு

புதுதில்லி:
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கல்வித் தகுதியை நீக்கம் செய்வது பற்றி மத்தியப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.\

பேருந்துகள், கனரக சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு எந்தவிதக் குறைந்தபட்ச கல்வித் தகுதியும் தேவை யில்லை என்று அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பும், இதேபோன்ற முடிவை போக்கு வரத்துத் துறை தெரிவித்திருந்தது. அப்போது, அதற்கு சட்ட அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது இம்முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த 4.8 லட்சம் சாலை விபத்துகளில் 3.35 லட்சம் விபத்துகளில் தொடர்புடைய வாகன ஓட்டுநர்கள் 8ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. “கல்வியறிவு பெறாத ஓட்டுநர்களுக்கும் விபத்துகளுக்குமான தொடர்பு குறித்து எந்த தரவுகளும் இல்லை. அதனால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்ட விதியில் திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்று போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சான்றிதழை வைத்து ஓட்டுநரின் கல்வித் தகுதியை முடிவு செய்ய இயலாது என்றும், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் சாலை விதிகள், குறியீடுகளை வாசிக்க மற்றும் எழுதத் தெரிந்திருக் கிறதா என்பதை அறியவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது பற்றிய தனிப்பிரிவு விரைவில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;