tamilnadu

img

காஷ்மீரில் மொகரம் ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

ஸ்ரீநகர், செப்.11- காஷ்மீர் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் மொகரம் ஊர் வலங்கள் செல்வதற்கு, கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரும், துணை பாது காப்புப் படையினரும் ஊர்வலங் கள் செல்லும் பாதைகளில் மிகப் பெரிய அளவில் தடை அரண்களை ஏற்படுத்தி இருந்தார்கள். ஊர்வலம் சென்றவர்கள், 1980களிலிருந்தே பெரிய அளவில் ஊர்வலங்கள் செல்வதற்குத் தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்கள். எனினும் கடந்த காலங்களில் ஷியா முஸ்லீம்கள், அரசாங்கம் அனு மதித்திடும் பாதைகளில் ஊர்வலம் சென்று வந்தனர். இப்போது அதற்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை. “என்னுடைய வாழ்நாளில் இது போன்று ஊர்வலம்  செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. மாநில நிர்வாகமும், மத்திய அரசாங்கமும் மிகவும் கொடூரமான முறையில் காவல்துறையினரையும், பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற னர்,” என்று 70 வயதுள்ள – குலாம் ஹூசேன், நியூஸ்கிளிக் இதழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

ஹூசேன், ஸ்ரீநகர் ஜடிபால் பகுதி யில் வசிப்பவர். ஒவ்வோராண்டும் இந்நாளில் இப்பகுதியில் பல்லா யிரக்கணக்கானவர்கள் ஊர்வல மாகச் செல்வார்கள். ஆனால், இந்தத் தடவை அனைத்துப் பகுதிகளும் தடை அரண்கள் ஏற்படுத்தப்பட்டு தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. எவ ரும் சுதந்திரமாகச் செல்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார். அனைத்து சாலைகளையும், மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளுக்குள்கூட, காவல்துறை யினரும், துணைப் பாதுகாப்புப் படையினரும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

“ஷியா முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மாதத்தின் முதல் மாதமான மொகரம் மாதத்  தின்போது, முகமது நபியின் பேரன்கள் இமாம் ஹூசேன் மற்றும் இமாம் ஹசான் ஆகியோரும் மற்றும் அவர்களுடன்  சேர்ந்திருந்த வர்களும், இன்றைய இராக்கில் உள்ள கர்பாலா நகரில் இறந்த தினத்தை அனுசரிக்கும் விதத்தில் இந்த துக்கதின ஊர்வலம் நடை பெற்று வந்தது. அன்றையதினம் பல இடங்களில் ரத்ததான முகாம்கள் நடத்துவோம். ஆனால் இந்தத் தடவை அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. எங்கள் இயக்கம் எங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிவிட்டது. இதன்மூலம் இன்றையதினம் எங்களுக்கு இரண்டாவது கர்பாலாவாக மாறி விட்டது,” என்று ஹூசேன் கூறினார். மேலும் இப்பகுதியில் வசிப்போர், தங்களிடம் காவல்துறை யினர் மிகவும் இழிவான முறை யில் நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டினார்கள். தன்வீர் பதன் என்பவர், காவல்துறையினர் தங்கள் பெண்களி டம் மோசமானமுறையில் நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

ஊர்வலங்களை இவ்வாறு தடை செய்தது மட்டுமல்ல, வீடுகளில் துக்கம் அனுசரிக்கும்போதுகூட தேவையில்லாது நுழைந்து, தலை யிட்டார்கள் என்றும் பலர் காவல் துறையினர்மீது குற்றஞ்சாட்டி னார்கள். “நாங்கள் மனரீதியாக உளைச்ச லுக்கு ஆளாகி இருக்கிறோம். எங்கள் மதநம்பிக்கை குறி வைக்கப்பட்டி ருக்கிறது. மொகரம் அனுசரிப்ப தற்கும், அரசியலுக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. .. இந்த சமயத்தில் துக்கம் அனுசரிப்பது என்பது எங்கள் நம்பிக்கை. அதற்குக்கூட இப்போது நாங்கள் அனுமதிக்கப்படவில்லை,” என்று ஒருவர் கூறினார். ஷியா முஸ்லீம்கள் அதிகம் வாழும் மற்றுமொரு பகுதி இமாம் படா என்பதாகும். இங்கும் மொகரம் ஊர்வலங்கள் நடைபெற்றசமயத்தில் செப்டம்பர் 7 அன்று மோதல்கள் நடைபெற்றுள்ளன. பலர் பெல்லட் குண்டுகளுக்கும், கண்ணீர்புகைக் குண்டுகளுக்கும் ஆளாகி யுள்ளார்கள். கர்பாலா துயர சம்பவத்தை நினைவுகூரும் விதத்தில் இந்த சமயத்தில் பலர் கறுப்பு உடை அணிந்திருப்பார்கள். இந்தத் தடவை இவ்வாறு கறுப்பு உடை அணிந்ததற்காகவே பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஹசான் அபாட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எங்கள் பகுதியில் 16 பையன்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு என்றார். “அமர்நாத் யாத்திரை செல்லும் லட்சக்கணக்கான வர்களுக்கு அவர்களால் பாதுகாப்பு அளிக்கமுடியுமானால், எங்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்?” என்று ஹசான் அபானைச் சேர்ந்த ஒருவர்  கேட்கிறார்.

(நன்றி: நியூஸ்கிளிக்) (தமிழில்: ச.வீரமணி)