tamilnadu

img

அஸ்ஸாமில் தொடரும் கனமழை... பலி எண்ணிக்கை 100-யை தாண்டியது...

திஸ்பூர் 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக பிரம்மபுத்திரா மற்றும் அதனின் துணை ஆறுகள் செல்லும் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ன. அந்த பகுதியில் குடியிருக்கும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர், 615 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை அஸ்ஸாமில் 134 பேர் வெள்ளத்துக்கு பலியாகியுள்ளார். 

நாட்டின் முக்கிய தேசிய பூங்காக்களில் ஒன்றான காசிரங்கா வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதுவரை அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகியுள்ளதாக வனக்காவலர்கள் கூறியுள்ளனர்.  

;