புதுதில்லி, மார்ச் 8- ஹர்ஷ் மந்தர் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது நியாய மல்ல என்றும் அகில இந்திய விவசாயி கள் சங்கம் கூறியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தலை வர் அசோக் தாவ்லேயும், பொதுச் செய லாளர் ஹன்னன்முல்லாவும் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் கலவரங்களைத் தூண் டும் விதத்தில் வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்த நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண் டும் என்கிற ஹர்ஷ் மந்தரின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்தி ருப்பது துரதிர்ஷ்டவசமானதும், நேர்மையற்றதுமாகும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கருது கிறது. ஹர்ஷ் மந்தரின் பொதுக்கூட்ட உரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் படித்துக்காண்பித்து, அரசு வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தி இருக்கிறார். இது அனைவராலும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
அரசமைப்பு சட்டத்துக்கு மேலானதல்ல
ஹர்ஷ் மந்தர், வன்முறையைத் தூண்டவில்லை. மாறாக ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் நடைபெற்ற அநீதிக்கு எதிராக அஹிம்சைவழியில் போராட வேண்டும் என்றுதான் தன் பேச் சில் குறிப்பிட்டிருந்தார். அயோத்தி தீர்ப்பு குறித்தும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும் அவர் கூறிய கருத்துக் கள் பேச்சுரிமையை அடிப்படை உரிமையாக உத்தரவாதம் செய்திருக் கிற அரசமைப்புச்சட்டத்தின் கீழ் முழு மையாக நியாயப்படுத்தக்கூடியதேயா கும். உச்சநீதிமன்றமும், நாடாளுமன்ற மும் அரசமைப்புச்சட்டத்திற்கும் மேலா னவை அல்ல. நாடும், அதன் அரசமைப்புச் சட்ட மும் ஆர்எஸ்எஸ்-இன் கொடிய நிகழ்ச்சிநிரலின் கீழ், வலதுசாரி மற்றும் மதவெறியர்களால் கடும் தாக்குத லுக்கு உள்ளாகியிருக்கும்போது, மதச்சார்பற்ற இந்தியக் குடியரசை, தங்களுடைய வெறிபிடித்த பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரமாக மாற்ற முயற்சித் துக் கொண்டிருக்கும்போது, கூருணர்வு மிக்க குடிமக்கள் அனைவரும் அரச மைப்புச்சட்ட அமைப்புகளான நீதித் துறை மற்றும் பொது அமைப்புகள்மீது தான் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனினும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அணுகுமுறை மக்களின் நம்பிக்கைக்கு விரக்தியை அளித்திருக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஹர்ஷ் மந்தரின் பக்கம் நிற்கிறது. இந்த ஆழமான நழுவல் போக்கை உச்சநீதி மன்றம் மறுபரிசீலனை செய்திடும், அதன் மூலம் அனைத்துத் தரப்பின ருக்கும் நீதி வழங்க முன்வரும் என்று நம்புகிறோம்.