tamilnadu

அனைத்து தேர்தல்களுக்கும் பொது வாக்காளர் பட்டியல்

மத்திய அரசு ஆலோசனை

புதுதில்லி,ஆக.29- நாடாளுமன்ற மக்களவை தேர்தல், சட்ட மன்றம், உள்ளாட்சி தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களுக்கும் பொது வாக்காளர் பட்டியலை உருவாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோ சனை நடத்தி வருகிறது.  மத்திய பாஜக அரசின் ஒரே மொழி, ஒரே ரேசன்கார்டு என்ற வரிசையில் தற்போது தேர்த லும் சேர்ந்துள்ளது. தற்போதுள்ள நிலையில் மக்க ளவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என தனித் தனியாக தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டி யலை தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது. அதே போல உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் மாநில தேர்தல் ஆணையம், நகராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து வாக்காளர் பட்டி யலை தயாரிக்கிறது. இது தவிர பல்வேறு மாநிலங்களில் உள்ள தேர்தல் ஆணையங்கள் வரைவு வாக்காளர் பட்டி யலையும் வெளியிட்டு சொந்தமாக வாக்காளர் பட்டியலையும் தயாரிக்கின்றன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் இருக்கும் முரண் பாடுகளை களைவது என்ற பெயரில்   மக்க ளவை, சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என அனைத்துக்கும் பொதுவான ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டு ஆலோசித்து வருகிறது. 

மாநிலங்கள் சட்டமியற்றி, சுயமாக உள்ளாட்சி தேர்தல்களை நடத்திக்கொள்ள அரசி யலமைப்புச் சட்டப்படி அதிகாரம் இருக்கிறது. இதன்படி மாநிலங்களே சொந்தமாக வாக்கா ளர் பட்டியலைத் தயாரிக்கலாம் அல்லது சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் தயாரித்த வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது மாநிலங்களை மத்திய தேர்தல் ஆணையம் தயாரித்த வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  ஒரே வாக்காளர் பட்டியல் முறைக்கு ஏற்கெ னவே தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், பணியாளர் மற்றும் சட்டத்துக்கான நாடாளு மன்ற நிலைக்குழு ஆகியவை ஆதரவு தெரி வித்துள்ளன. ஆனால் நாடாளுமன்றம், சட்ட மன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று ஏற்கெனவே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.