மத்தியபிரதேசத்தில் காந்திஜியின் அஸ்தி திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி காந்தியின் 150வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையல் அவரது பிறந்தநாள் அன்றே மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து காந்திஜியின் அஸ்தியை அடையாளம் தெரியாத சிலர் திருடிச்சென்றுள்ளனர். மேலும் அவருடைய சிலை அருகே தேச துரோகி என்று எழுதப்பட்டுள்ளது,
இதுகுறித்து மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரேவா பகுதியை சேர்ந்த போலீசார், நாட்டின் ஒருங்கிணைப்புக்கு பாதகம் மற்றும் அமைதிக்கு குந்தகம் என்ற முறையில் நடந்த திருட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.