புதுதில்லி, மார்ச் 23- தில்லி, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், மார்ச் 31 வரை முழு அடைப்பு அறிவிக்கப்பட் டுள்ளது. இதையொட்டி, தில்லியின் அண்டை மாநி லங்களான ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத் துடனான எல்லைகள் மூடி சீல் வைக்கப்படுகின்றன. மாநிலங்களுக்கு இடை யேயான பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில் சேவைகள் மட்டுமன்றி, தில்லிக்கு வரும் அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களும் தற்காலி கமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.