மும்பை:
வெளிநாடு செல்லவிருந்த என்டிடிவி-யின் நிர்வாகிகள் பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகியோர், மும்பைவிமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.சிபிஐ நோட்டீசின் அடிப்படையில், இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வார காலம் வெளிநாடு செல்லதிட்டமிட்டு, ஆகஸ்ட் 16-ஆம் தேதி இந்தியா திரும்பி வருவதற்கான விமான டிக்கெட்டுகளையும் பிரணாய் ராய், ராதிகா ராய் தம்பதி முன்பதிவு செய்திருந்தது. இந்நிலையில்தான், அவர்கள் வெள்ளிக் கிழமையன்று மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டுக்கு புறப்படவிருந்த நேரத்தில் தடுத்து நிறுத்தப் பட்டு உள்ளனர்.ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கடன் தொடர்பாக, பிரணாய் ராய், ராதிகா ராய் மீது 2017-ஆம் ஆண்டில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்நிலையில், அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையிலேயே, தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.ஆனால், போலியான முற்றிலும்ஆதாரமற்ற ஊழல் வழக்கின் அடிப்படையிலேயே தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று என்.டி.டி.வி. தெரிவித்துள்ளது.“இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக தில்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிரணாய் ராய்,ராதிகா ராய் ஆகியோர் இந்த வழக்கில் முழுமையாக ஒத்துழைத்து வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டிற்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால்தற்போது மட்டும் திடீரென அவர்கள்வெளிநாட்டிற்கு செல்வது ஆபத்தானது என்று கூறுவது நகைப்புக்குரியது. பிரணாய் ராய், ராதிகா ராய்தடுத்து நிறுத்தப்பட்டது குறித்துநீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் மீதான இத்தகுநடைமுறை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது” என்றும் என்.டி.டி.வி. அறிக்கை வெளியிட்டுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளையும்; அது நீக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள இந்துத்துவா அரசியலையும் என்டிடிவி தொடர்ந்துவிமர்சித்து வந்தது. இதன்காரணமாகவும் என்டிடிவி நிறுவனர்கள் மீதுமோடி அரசு தாக்குதலைத் தொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு, மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களையும் என்.டி.டி.வி.விமர்சித்தது. அப்போது அந்த நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது; வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.