மத்திய அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி வேண்டுகோள்
புதுதில்லி, ஏப்.10- கோவிட்-19 தொற்று பரவுவதை முறியடித்திட, மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போது மானதல்ல. நாட்டைப் பாதுகாத்திட, நாட்டு மக்க ளைப் பாதுகாத்திட ஒன்றுபட்ட நடவடிக்கை களுக்கு அரசு முன்வரவேண்டும். கேரள மாநிலம் மேற்கொண்டதைப்போன்று நாடு முழுவதும் அது நடவடிக்கைகள் எடுத்திட முன்வர வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனிலிருந்து காணொலிக் காட்சி மூலம் ஊடகவியலாளர் சந்திப்பை சீத்தாராம் யெச்சூரி மேற்கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:
நடந்து சென்ற 117 பேர் பலி
நாம் மிகவும் பயங்கரமான போர்க்களத்தின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறோம். கொரானா வைரசுக்க எதிரான இந்தப் போர்க்களத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றோம். நாட்டில் எவ்விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்படாமல் சமூக முடக்கம் திடீரென்று அறி விக்கப்பட்டது. இதன் விளைவாக பல லட்சக்க ணக்கான மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆளாகி யுள்ளனர்.
தனது நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஏற்கனவே உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதனை பட்டினிச்சாவு ஏற்படக்கூடிய அளவிற்கு நாம் கொண்டுசென்றுவிடக்கூடாது. சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டபின் முதல் இரு வாரங்களில் நடை பயணமாகச் சென்றவர்களில் உணவு இல்லாம லும், தங்குமிடம் இல்லாமலும், இயலாமையின் காரணமாகவும் 117 பேர் இறந்துள்ளார்கள். இந்த நிலைமையைச் சரி செய்தாக வேண்டும். இதற்கு உணவு தானியங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்திட வேண்டும். நம் அரசாங்கக் கிடங்குகளில் 7.5 கோடி டன்கள் உணவு தானியங்கள் இருப்பில் இருக்கின்றன. இவற்றை அனைவருக்கும் விநியோகித்திட வேண்டும்.
கேரளாவின் முன்மாதிரி
அடுத்ததாக நாட்டு மக்களில் பலர் தங்கு மிடங்கள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கேரளா வில் செய்திருப்பதைப்போல அரசாங்கம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். இந்தியாவில் அமைக்கப்பட்ட தங்குமிடங்களில் கேரளாவில் மட்டும் 68.8 சதவீதம் இருப்பதாக மத்திய அரசே உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள உறுதிவாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது. கேரளா இவ்வாறு செய்ய முடியும் என்றால் ஏன் நாடு முழுவதும் செய்ய முடியாது? அவ்வாறு செய்திட மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போது மானதல்ல. மத்திய அரசு திடீரென்று சமுக முடக்கத்தை அறிவித்தபின் சாமானிய மக்கள் தங்குவதற்கு இடமின்றி தத்தளித்தனர். இவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் எதுவும் முறையாகச் செய்யப்படவில்லை. வீடற்றவர்களில் மிகவும் குறைந்த அளவிலான மக்களே அரசுகள் ஏற் படுத்தியுள்ள தங்குமிடங்களில் தங்கி இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நட வடிக்கைகளை கேரள அரசாங்கம் வெற்றிகர மாகச் செய்திருக்கிறது. இதைப்போல நாடு முழு வதும் செய்திட, மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். ஆனால் கேரளா மிகவும் சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்துள்ள போதிலும், மத்திய அரசு அம்மாநில அரசுக்கு இது தொடர்பாக உதவுவதில் பாரபட்சம் காட்டி வருகிறது. இத்த கைய போக்கு ஆரோக்கியமானது அல்ல. இதனை மத்திய அரசு தவிர்த்திட வேண்டும்.
கேரளா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி உதவி யினைச் செய்திட வேண்டும். தற்போது பிரதமர் ஏற்படுத்தியுள்ள பிஎம் கேர்ஸ் நிதியத்தில் பல்லாயி ரம் கோடி ரூபாய் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவற்றி லிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் தாராள மாக நிதி உதவியினை மத்திய அரசு செய்திட வேண்டும்.
ஊதியத்தை வெட்டாதீர்
அடுத்ததாக, சமூக முடக்கத்தின் காரணமாக நாட்டில் வேலை இழப்புகள் அதிகரித்திருக்கிறது. நாட்கூலித் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் வேலைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர். நிரந்தர தொழிலாளர்கள் கூட வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். வேலை நீக்கம் செய்யப்படாத தொழிலாளர் களில் பலருக்கு ஊதிய வெட்டு ஏற்படுத்தப்பட்டி ருக்கிறது. பல இடங்களில் அவர்கள் வாங்கி வந்த ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குதான் அளிக்கப் பட்டிருக்கிறது. அவர்களின் சம்பளம் குறையா மல் பாதுகாக்கப்படும் என்று அரசாங்கம் கூறி யிருந்தபோதிலும், வேலையளிப்பவர்கள் அதனைத் தரத் தயாராக இல்லை. “எங்களுக்கு வர்த்தகம் இல்லை, எனவே எங்களால் சம்பளம் தரமுடியாது“ என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இத்தகைய நிலைமைகளில் அரசாங்கம் ஊழி யர்களின் ஊதியம் வெட்டப்படாமல் இருக்க உத்தர வாதம் அளித்திட வேண்டும். உலகில் பல அரசுகள் தங்கள் நாட்டிலுள்ள ஊழியர்களுக்கு அவர்கள் வாங்கி வந்த ஊதியத்தில் 80 சதவீதத்தை அளித்தி ருக்கிறது. ஆனால் அதுபோன்று எந்த நடவடிக்கை யையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை. இவற்றின் விளைவாக லட்சோபலட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். இது சரிசெய்யப்பட வேண்டும். அவர்களின் ஊதி யம் குறைக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்பை அரசாங்கம் செய்திட வேண்டும். அதேபோன்று ஊழியர்கள் பெற்ற கடன் களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு வழங்கிட வேண்டும்.
அறுவடைக் காலம்
அடுத்ததாக, விவசாயிகள் பிரச்சனை. நாட்டின் பல பகுதிகளில் இது அறுவடைக்காலம். விவசாயி கள் அறுவடை செய்வதற்கு உதவும் விதத்தில் அப்பகுதிகளில் சமூக முடக்கத்தை விலக்கிக் கொண்டு அவர்கள் அறுவடை செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும்.
அவர்கள் அறுவடை செய்த தானியங்களைப் பெற்றுக்கொள்ள சந்தைகள் இல்லை. எனவே அவற்றை அரசாங்கமே இந்திய உணவுக் கழ கம் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு ஏஜென்சி கள் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்திட வேண்டும். இதையெல்லாம் செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை நாம் பெற முடியாத நிலை உருவாகும். எனவே இவற்றை அவசியம் செய்திட வேண்டும்.
பரிசோதனையை விரைவுபடுத்துக!
அடுத்ததாக, சமூக முடக்கத்தின் நோக்கம் என்ன? சமூக முடக்கக் காலத்தில் மக்கள் பரிசோத னைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமாயின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இது தான் உலகில் அனைத்து நாடுகளிலும் நடைமுறை. ஆனால் இங்கே என்ன நிலைமை? அதற்கான கட்டமைப்பு வசதிகளே இங்கே கிடையாது. சமூக முடக்கத்தை அறிவித்து மூன்று வாரங்களாகி விட்டது. உலகில் மிக மிகக் குறைவான அள வில்தான் நம் நாட்டில் பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டிருக்கின்றன. மற்ற நாடுகளில் பத்து லட்சம் பேருக்கு 13 ஆயிரம் பேர் சோதனை செய்யப்பட்டி ருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 10 லட்சம் பேர்களில் 102 பேருக்குத்தான் சோதனை செய்யப் பட்டிருக்கிறது. நம்மைவிட பாகிஸ்தானில் அதிகம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அங்கே பத்து லட்சம் பேர்களில் 191 பேருக்கு சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு சோதனைகள் மேற்கொள்வது நத்தை வேகத்தில் இருக்கக் கூடாது. இதனை அவசர கதியில் விரைவுபடுத்திட வேண்டும்.
சமூக முடக்கக்காலத்தில் தொற்று பாதிக்கப் பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு அதனைத் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். மற்ற பகுதிகளில் கொஞ்சம் கொஞ்ச மாக சமூகமுடக்கத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் நம்மை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியையும் நம்மால் தீர்க்க முடியாது. மக்களின் வாழ்வாதாரங்களில் ஏற்பட்டி ருக்கும் நெருக்கடியையும் நம்மால் தீர்க்க முடி யாது. கேரளாவில் இதனை நாம் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறோம். இதேபோல் நாடு முழுதும் செய்திட வேண்டும்.
மருத்துவர்களைப் பாதுகாப்போம்!
அடுத்து, இவ்வாறு தொற்றுக்கு எதிரான சிகிச்சை செய்து வரும் மருத்துவர்கள், மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டி யது மிகவும் அவசியமாகும். இவர்களுக்குத் தேவையாக பாதுகாப்பு உபகரணங்களை அளிப்ப தற்கு, மத்திய அரசு, அனைத்து மாநில அரசு களுக்கும் உதவிட வேண்டும். இந்த சமயத்தில் அனைத்து அதிகாரங்களும் தமக்கே வேண்டும் என்ற விதத்தில் மத்திய அரசு நடந்துகொள்ளக் கூடாது. மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். தேவையானால் அந்தப் பகுதியை இதர பகுதியிலிருந்து முற்றிலு மாகப் பிரித்து முற்றாக மூட (sealed) வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று குறித்து இந்தியா வில் முதன்முதலில் ஜனவரியில் கண்டுபிடிக்கப் பட்டது. அப்போதே இதற்கு எதிராக நடவடிக்கை கள் எடுத்திருந்தால் இந்த அளவிற்கு நிலைமை கள் மோசமாகி இருக்காது. இப்பொழுதாவது நாம் இவற்றைச் சரி செய்துகொள்ள வேண்டும். இத்தொற்றை பரவாது தடுப்பதற்கான உபகர ணங்களை அதிக அளவில் உற்பத்தி செய்திட வேண்டும்.
கூடுதல் நிதி ஒதுக்குக!
இறுதியாக, இந்தத் தொற்றை ஒழிப்பதற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை 15 ஆயிரம் கோடி ரூபாய். நிச்சயமாக இது மிகவும் குறைவு. கேரள அரசு தன் மாநிலத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. எனவே மத்திய அரசும் கூடுதலாக நிதியை ஒதுக்கிட அனைத்து மாநிலங்களுக்கும் அளித்திட வேண்டும். மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி தொகைகளைக்கூட மத்திய அரசு தராமல் இருக்கி றது. இதனை அளித்திட வேண்டும்.
‘கொரோனா வைரஸ் தொற்று எதிரான போராட்டத்தை நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றுபட்டு நின்று எதிர்த்திட வேண்டும். ஆனால் இதிலும்கூட மத்திய அரசு தன்னுடைய மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக நஞ்சை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை உலக சுகா தார அமைப்பும் உலகின் பல நாடுகளும் கண்டித்தி ருக்கின்றன. மத்திய அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டி ருப்பவர்களுக்கு சிகிச்சை அளித்திடும் நம் மருத்து வர்களையும், மருத்தவ சுகாதாரப் பணியா ளர்களையும் உரிய பாதகாப்பு உபகரணங்கள் கொடுத்து பாதுகாத்திட வேண்டும். அவர்களின் மூலமாக நம் ஒட்டுமொத்தமக்களையும் பாது காத்திட வேண்டும். இவை அனைத்தையும் அவசர கதியில் செய்திட வேண்டும். இவை மிகவும் முக்கியம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறி னார்.
(ந.நி)