காஷ்மீர், டிச.14- ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் சனிக் கிழமை முதல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. பரூக் அப்துல்லா அவரது இல்லத் தில் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார். இதுகுறித்து ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிர தேசத்தின் உள்துறைக்கான ஆலோசனைக் குழு, அவரது தடுப்புக்காவலை மேலும் நீட்டிக்கக்கோரி பரிந்துரைத்தது என்று அதிகாரிகள் கூறினர்.