tamilnadu

img

விவசாயிகளுக்கும் - விலங்குகளுக்கும் இடையிலான மோதலுக்கு முடிவு கட்டுக! - பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் யானை, மான், மயில், காட்டுப் பன்றி, காட்டெருமை ஆகிய வனவிலங்குக ளால் வேளாண் பயிர்கள் மற்றும் மகசூல் அழிக் கப்படுவது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. வனக்கொள்ளையர்கள் வனத்துறையினரின் ஆதர வுடன் வனவளங்களை தொடர்ந்து அழித்து வருகின்ற னர். இதன் காரணமாக வன விலங்குகளுக்கு தேவை யான தீவனங்கள் வனங்களில் கிடைக்காத காரணத் தால் அவை வனத்தை விட்டு வெளியேறி விளை நிலங்களிலும், ஊருக்குள்ளும் புகுந்து அழிவை ஏற்படுத்தி வருகின்றன. வனவிலங்குகளை  வேட்டை யாடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் விவ சாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். 

விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோத லில் மனித உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் பலர் காய மடைந்து நிரந்தரமாக ஊனமடைந்து நடைப் பிணமாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. வனவிலங்கு களிடமிருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இது குறித்து கடுகளவும் கவலைப்படாத நிலை தான் இருக்கி றது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திரு வண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வாழை, தென்னை, மரவள்ளி, மக்காச்சோளம், பலா, மா, ஆரஞ்சு, காபி, நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் மேற்படி விலங்குகளால் தமிழ் நாட்டில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 1500 கோடிக்கு இழப்பு ஏற்படுகிறது. இது விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு மட்டுமல்ல. தேசத்தின் வேளாண் பொருளா தாரத்தில் ஏற்படும் பாதிப்பு என்பதை மத்திய - மாநில அரசுகள் உணர வேண்டும். எனவே, இந்த பாதிப்புக ளிலிருந்து விவசாயிகளையும் - விவசாயத்தையும் பாது காக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும். 

கண்டுகொள்ளப்படாத வேண்டுகோள்கள்

ஒரு தடவைக்கு 30,40 குட்டிகள் போட்டு பல்லாயி ரக்கணக்கில் பெருகிவிட்ட காட்டுப்பன்றியை பாது காக்கப்பட்ட வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து விவசாய சங் கங்களாலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரு கிறது. ஆனால் அரசின் காதுகளுக்கு அது எட்டியதா கவே தெரியவில்லை. வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ல் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் எவையென பட்டியலிடப்பட்டுள்ளது.  அதே சட்டம் பிரிவு 11ல் மனிதர்களுக்கும், பயிர்க ளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகளை வனத் துறை அதிகாரிகளின் அனுமதியுடன் யார் வேண்டு மானாலும் வேட்டையாடலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இத்தகைய நல்ல நோக்கத்தோடு விலங்குகளை கொல்வதோ அல்லது காயமேற் படுத்துவதோ குற்றமாகாது என்றும் குறிப்பிட்டுள் ளது. அதே சமயத்தில் தற்காப்புக்காக இப்படி கொல் லப்படும் வனவிலங்குகள் அரசாங்க சொத்து என்ற வகையில் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேற்படி சட்டம் பிரிவு 62ல் உயிர்களுக் கும், பயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த எந்தவொரு வன விலங்கையும், குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட காலத்திற்கு பட்டியலிலிருந்து நீக்கி மத்திய அரசு உத்தரவிடலாம் என்றும் குறிப்பிடுகிறது.  இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் தான் இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் விவசாயத்தை அழிக்கும் குரங்குகளை அழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் காட்டுப் பன்றியை அழிப்பதற்கு 2015 டிசம்பர் 9ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  கேரள மாநிலத்தில், பயிர் நாசம் செய்யும் வன விலங்குகளை ரேஞ்சர் அல்லது வனஉயிரின உதவி பாதுகாவலர் அவர்களிடம் அனுமதி பெற்று வெடி வைத்து கொல்லலாம் என்று 23.6.2011 அன்று அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்படி அந்தந்த மாநிலங்களில் பயிர்களை நாசம் செய்யும் வன விலங்குகளை அழித்து விவசாயத்தையும் - விவசாயி களையும் பாதுகாக்க சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. 

தலைகீழாக இருக்கும் தமிழக நிலைமை

ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. விவசாயிகளை குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்ட கிரிமினல்கள் போல் வனத் முறை நடத்துகிறது. பயிருக்கு பூச்சிமருந்து அடிப்பது தற்போது தவிர்க்க முடியாதது. அந்தப் பயிரை தின்று காட்டுப்பன்றியோ, வேறு விலங்குகளோ இறந்துவிட்டால் விவசாயிகள் மீது வழக்கு போடப்படுகிறது. தென்னை க்கு வைக்கப்படும் யூரியா உள்ளிட்ட உரங்களை  தின்று இறப்பது, மருந்து கலந்த விதையை தின்று மயில் இறந்தாலோ அல்லது நாய் கடித்து மானோ, மயிலோ, பன்றியோ காயமடைந்துவிட்டாலோ அல்லது இறந்து போனாலோ வழக்கு விவசாயிகள் மீது போடப் படுகிறது. வேட்டையாடுவது குற்றம் என்பது விவசாயி கள் அறியாததல்ல. மேற்சொன்னபடி நடக்கும் சம்ப வங்களுக்கு வழக்கு போடுவது விவசாயிகளை குற்ற வாளியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப் படுவதாகவே கருதவேண்டியுள்ளது.  இதை பயன்படுத்தி வனத்துறையினர் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் மீது பொய்வழக்குப் போட்டு கைது செய்வது, அடித்து துன்புறுத்துவது, ஆயிரக்க ணக்கான ரூபாய் அதாவது 1 லட்சம் வரை அபராதம் வசூலிப்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். 

தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வேறொரு வருடைய ஆடு - மாடு மேய்ந்தாலே அடித்து விரட்டுவோம். வேளாண்மையை முற்றிலும் அழிக்கும் காட்டுப்பன்றி, மயில், மான் ஆகியவற்றை அடித்து விரட் டாமல் வேடிக்கை பார்க்க முடியுமா? வனவிலங்கு கள் வனத்திற்குள் இருந்தால் விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனையுமில்லை. அது வனத்தைவிட்டு வெளியேறி விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்திற்குள் புகுந்து நாசம் செய்யும் போது, தங்கள் குடும்பத்தின் ஆதாரம் அழிக்கப்படும் போது விவசாயிகள் கைகட்டி, வாய் பொத்தி இருக்க வேண்டுமென்று வனத்துறை எதிர்ப் பார்ப்பது இயற்கை நீதிக்கு புறம்பானது.  எனவே, தமிழக அரசு தங்களது உயிரையும், பயிரையும் பாதுகாத்துக் கொள்ள விவசாயிகள் காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை விரட்டும் போது அது இறந்துவிட்டால் அதற்காக வழக்கு போடுவது அபராதம் விதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத் தும் வகையில் காட்டுப்பன்றியை அழிப்பதற்கு கேரள மாநில அரசைப் போல் வெடிவைத்துக் கொல்ல தமிழக அரசு உத்தரவிட வேண்டும். 

வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறா மல் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அதை மீறி வெளியேறும் விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையான இழப்பீட்டை அரசு தாமதமில்லாமல் வழங்க வேண்டும். இப்போது இழப்பீட்டை பெற வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்மை துறை ஆகிய மூன்று துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு அறிக்கை தர வேண்டி யுள்ளது. பிறகு வனத்துறை மூலம் உயரதிகாரிக ளுக்கு அனுப்பி பிறகு நட்டஈடு தரப்படுகிறது. அதுவும் பல்லாண்டு காலத்திற்கு முன்பு தீர்மானிக்கப்பட்ட  சொற்ப தொகை. உற்பத்தி செலவு பல மடங்கு அதி கரித்திருக்கக் கூடிய நிலையில் அதற்கேற்ப இழப்பீட்டு தொகை உயர்த்தப்பட வேண்டும்.  அதே போல், விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு நான்கு லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது குறைந்தபட்சம் பத்து லட்ச மாக உயர்த்தப்படுவதுடன், காயமடைந்தவர்கள், எலும்பு முறிந்தவர்களுடைய முழு மருத்துவ செலவை யும் அரசு ஏற்க முன்வர வேண்டும். இத்தகைய நட வடிக்கைகளை எடுப்பதன் மூலம் தான் விவசா யத்தை பாதுகாப்பதுடன் விவசாயிகளுக்கும் வனத்துறைக் கும் இடையிலான போதலையும் முடிவுக்கு கொண்டு வர முடியும். எனவே, தமிழக அரசு இந்த பிரச்சனையில் தாமதமில்லாமல் தலையிட வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பு.