tamilnadu

img

மின்சார திருத்த மசோதா கொண்டு வர இதுதான் நேரமா? மோடி அரசு எதற்காக அவசரப்படுகிறது...?

ராய்ப்பூர்:
நாடு மிக மோசமான தொற்றுநோயால்பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மின்சாரதிருத்த மசோதா-2020ஐ முன்மொழிந்திருப்பது ஏன்? என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் (காங்கிரஸ்) கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை பாகேல் எழுதியிருக்கிறார். அதில்,அவர் மேலும் கூறியிருப்பதாவது:“பெரும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தில், மக்கள் செலவு செய்யும்தகுதி அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமே தவிர, உற்பத்திச் செலவை வைத்து கட்டண நிர்ணயம் செய்வது பலன்தராது என்று குறிப்பிட்டுள்ளார்.வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு புவியியல் வளங்களைக் கொண்டுள்ளன. தேசத்தின் நலனுக்காகவே வளங்கள் மிகவும் திறமையாகவும் பொருளாதார ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் ஒரே அளவுகோல் அனைவருக்கும் பொருந்தாது, ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒரே கொள்கையை மற்றும்ஒரு குறித்த சதவிகிதத்தைக் கட்டணமாக அறிவிப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.முன்மொழியப்பட்ட மின்சார திருத்த மசோதாவானது, புதுப்பிக்கத்தக்க மற் றும் நீர் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கி பரிந்துரைக்கிறது. ஆனால், இதனை மாநில ஆணையங்களுக்கு வழங்க வேண்டும்.

நாடு மிக மோசமான தொற்றுநோயால்பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மின்சாரதிருத்த மசோதா (2020) முன்மொழியப் பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.நாடு முன் எப்போதும் சந்திக்காத ஒருபிரச்சனையில், அரசின் அனைத்துத் துறைகளும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மக்களின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காகவே இந்த நேரத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்து இருப்பதாக நிபுணர்களும், ஊழியர் சங்கங்களும் குற்றம் சாட்டுகின்றன.
எனவே, நாடு சுமூக நிலைக்கு திரும்பியபின், அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலோசித்து புதிய வரைவு மசோதாவை கொண்டுவரவேண்டும் அதுவரை இந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.”இவ்வாறு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ்பாகேல் கூறியுள்ளார்.

;