tamilnadu

img

’மிஷன் சக்தி’ குறித்த மோடியின் உரை தொடர்பாக ஆய்வு -

நாட்டு மக்களுக்கு மிக முக்கிய உரையாற்றப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டார். இதை அடுத்து, பகல் 12.26 மணி அளவில், ’மிஷன் சக்தி’ திட்டமான விண்ணில் உள்ள செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் ’ஏசாட்’ சோதனை வெற்றி அடைந்ததை தனது உரையில் அறிவித்தார்.


இதனை அடுத்து, விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனைக்கு பிரதமர் மோடி உரிமை கோருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பை ஒரு பிரதமர் வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும். எனவே இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.


இந்நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

;