tamilnadu

img

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் 

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து  மூன்று முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
பல்கார் மாவட்டத்தில்  இன்று காலை  5.22 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 3.9 ஆக பதிவானது.  தஹானு தாலுகாவில் உள்ள  துண்டல்வாடி என்ற கிராமத்தில்  வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்தே 2 முறை லேசான நிலநடுக்கத்தை உணர முடிந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியம் 12.26 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், 3.4  ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் இரவு 9.55 மணியளவில் ஏற்பட்டு உள்ளது.  எனினும் இந்த நிலநடுக்கங்களால் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.