tamilnadu

தேசம் காக்கும் கடமை ,இசைப்பாடல் : ‘‘ராணி மகாராணி’’

மோடி மஸ்தான் மோடி! மதவெறியின் டாடி! 

தலித்து இந்துவையும் வதைத்தார் ஆட்சிமகுடம் சூடி! (மோடி) 


நேற்று வரை டீக்கடையில் வேலை பார்த்த மோடி! 

இன்று அதானி அம்பானி காவலாளி மோடி! 

ஏழை ஓட்டுப் போட்டதாலே ஆளவந்த மோடி! 

அந்த ஏழை ஜனங்களுக்கே தீமை செய்த மோடி!  (மோடி) 

மாட்டுக்காக மனிதர்களைக் கொல்லும் நாடு உண்டா? 

மோடி ஆளும் இந்த நாட்டைத் தவிர எங்கும் உண்டா?

உழைக்கும் இந்துத் தலித்துகளைக் கொன்ற கொடுமையுண்டா? 

இஸ்லாமியக் கிறிஸ்தவரைத் தூற்றும் அவலம் உண்டா? (மோடி)  

இன்னும் மோடி ஆளவந்தால் ஒருமைப்பாடு வீழும்!

இந்திய ஜனநாயகமும் இறையாண்மையும் மாளும்! 

தேசம் சாதி மதச் சண்டையால் சீரழிதல் சிறுமை!

பாஜக-வை வீழ்த்துவதே தேசம் காக்கும் கடமை!  (மோடி)


கவிஞர் சோலைகண்ணன்




;