புதுதில்லி, ஜூலை 9 - சேலம் உருக்காலையை தனி யாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன், செவ்வா யன்று ஆவேசத்துடன் குரல் எழுப்பி னார். இது உள்ளிட்ட பிரச்சனைகளால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று மாநிலங்களவையில் கர்நாடக அரசியல் நெருக்கடி, சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் பிரதான இடம்பிடித்தன. செவ்வாய் காலை அவை கூடியதும், கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்ப்பதற்கு பாஜக மேற்கொண்டுள்ள குதிரை பேரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப் பினர்கள் பிரச்சனை எழுப்பி அவைத் தலைவரின் இருக்கையை நோக்கி வந்து கோஷம் எழுப்பினர். இந்நிலை யில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரம் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. இதற்கு எதிர்ப்பு தெரி வித்தும் கர்நாடக பிரச்சனை தொடர்பாக வும் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது, சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவு மற்றும் முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன் பிரச்சனை எழுப்பினார். கட்சியின் உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட உறுப்பினர்களும் இணைந்து, சேலம் உருக்காலையை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனிடையே பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு தரக்கூடாது என்று திரிணாமுல் உறுப்பினர்கள் தனியாக எழுந்து கோஷமிட்டனர். இதற்கிடையே கர்நாடக பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. அவையில் தொடர்ந்து அமளி நிலவிய நிலையில், நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையிலும் கர்நாடக அரசியல் நெருக்கடி தொடர்பான பிரச்சனை எதிரொலித்தது. சேலம் உருக்காலை தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.ரங்கராஜன் எம்.பி., மத்திய பட்ஜெட்டில் சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களின் 49சதவீத பங்குகளை தனி யாருக்கு தாரைவார்ப்பது என்று அறி விக்கப்பட்டுள்ளது. தேசத்தின் மிக முக்கியமான சொத்துக்களான பொதுத் துறை நிறுவனங்களை விற்றுச் சூறை யாட ஒருபோதும் அனுமதிக்க முடி யாது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு சராசரி யாக ரூ.80 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரையிலான மதிப்பு கொண்ட பொதுத்துறை நிறுவன சொத்துக்கள், பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் உருக்காலையும் தொடர்ந்து குறி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தமிழகத்தில் சேலம் உருக் காலை தொழிலாளர்களும் இதர பல்வேறு பொதுத்துறை நிறுவன ஊழி யர்களும் தொடர்ந்து போராட்டங் களில் ஈடுபட்டுள்ளனர். எனவே சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.