புதுதில்லி முழு மாநில அந்தஸ்து மற்றும் லடாக்கை 6ஆவது அட்ட வணையில் சேர்க்கக் கோரி லடாக் பவனில் உண்ணாவிரதம் இருக் கும் சோனம் வாங்சுக் மற்றும் அவரது தோழர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சந் தித்து ஆதரவு தெரிவித்தனர். போராட் டக் களத்திற்கு வந்த சிபிஎம் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் (கேரளா) ஆகியோர் போராட்டத்திற்கு கட்சியின் முழு ஆதரவை அறிவித்தனர்.
“பாஜக தனது 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் மாநில அந் தஸ்து மற்றும் 6ஆவது அட்டவணை யை உள்ளடக்கியிருந்தாலும், அது தனது வாக்குறுதியை ஐந்து ஆண்டு களாக நிறைவேற்றவில்லை என வாங் சுக் சிபிஎம் தலைவர்களிடம் கூறினார்.
தலைவர்கள் முதலில் லடாக் பவன் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் கவால்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி அனுமதித்தனர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் அர சமைப்பு உரிமைகளை ஒன்றிய அரசும் பாஜகவும் சர்வாதிகார வழியில் மறுத்து இப்போது போராட்டத்தை ஒடுக்கி வரு கின்றன என்று பிருந்தா காரத் கூறினார்.பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் வாங்சுக் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படுவது நாட்டுக்கே அவமானம். ஒன்றியத்திற்கு கார்ப்பரேட் ஆர்வம் மட்டுமே உள்ளது. லடாக்கின் திரு டப்பட்ட உரிமைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பிருந்தா கூறினார். இது மண்ணையும் உயிரையும் காக்கும் போராட்டம் என் றார் ஜான் பிரிட்டாஸ். இதற்கிடை யில், போராட்டக்காரர்கள் லடாக் பவ னில் அறிவிக்கப்படாத காவலில் வைக் கப்பட்டுள்ளதாக வாங்சுக் தெரிவித் தார். வெளியே செல்ல அனுமதி இல்லை. கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை. இரண்டு நாட்களுக்குள் உயர்மட்ட அர சியல் தலைமைகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது ராஜ்காட்டில் உறுதி அளிக்கப்பட்டது. அது பின்பற்றப்படவில்லை என வாங்சுக் கூறினார். இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.