tamilnadu

img

தில்லி மாநாடு : இம்ரான்கானுக்கு அழைப்பு

புதுதில்லி,ஜன.17- தில்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார்  தில்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஷாங்காய் அமைப்பில் உள்ள 8 உறுப்பு நாடுகள் மற்றும் 4 பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்க ப்படும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏதேனும் ஒரு விவகாரம் விவாதிக்கப்பட வேண்டுமானால், அது இரு தரப்பு ரீதியாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற செய்தி பாகிஸ்தானுக்கு சத்தமாக வும், தெளிவாகவும் சென்றுள்ளது என்று நம்புகிறோம்.

;