tamilnadu

img

குறைபாடுள்ள மருத்துவக் கட்டமைப்பு: தயார் நிலையில் இல்லாத இந்தியா

கொரோனாவைரஸ்பரவல்தொடர்ந்து அதிகரித்துவரும்நிலையில் தயார்நிலையில் இல்லாத இந்தியாவின் மோசமான பொதுசுகாதார அமைப்பு கடினமான சோதனையை தற்போது எதிர்கொண்டு வருகிறது.
இதில் பாராட்டத்தக்க ஒரே விஷயம் என்னவென்றால் 1.3 பில்லியன் மக்கள்தொகையில்  கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது மட்டும்தான். மார்ச் 22 முதல் சுயஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களிடம் மார்ச் 19 அன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களை அவரவர் வீட்டு மொட்டை மாடிகளில் நின்று மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களின் பணியை கைதட்டி மற்றும் மணியடித்துப் பாராட்டிட வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் பொருட்களை பதுக்கக்கூடாது எனவும் சுகாதாரம் குறித்த அரசின் முன் முயற்சிகளைஅறிவிக்கவேண்டாம்எனவும்வேண்டுகோள்விடுத்தார்.
பயண ஆலோசனைகளை வழங்குவது விமானநிலையங்களில் பரிசோதனை வழிமுறைகளை நிறுவுவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துவது என அரசின் அனைத்து முயற்சிகளும் ஒப்புக்கொள்ளப்பட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை போதுமானதாக இல்லை எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐ.சி.எம்.ஆர்) சிறிய அளவில் நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனைகளின் அடிப்படையில் சமூகப்பரவல் நிகழவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது எனவும் பொதுசுகாதார வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுவதாகவும்  சமூகத்தோடு தொடர்பில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. மார்ச் 21 அன்று கோவிட்-19 பரிசோதனைகள் குறித்து ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட திருத்தப்பட்ட அறிவிப்பில்  இந்தியாவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த அறிவிப்பின்படி  “இயல்பான சமூகப்பரவல் என்பது இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை" என்பது தெரிகிறது. ஆக சமூகபரவல்ஆவணப்படுத்தப்பட்டதும்  மேற்சொன்ன சோதனை முறை என்பது படிநிலைக்கு ஏற்ற சோதனை முறையாக மாறக்கூடும் என்பதுதான் உண்மை.
மேலும்கடந்த 14 நாட்களில் சர்வதேச பயணத்தை மேற்கொண்ட அனைத்து கோவிட்-19நோய் அறிகுறியற்ற நபர்களும் அடுத்த 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் தங்க வேண்டும் என்றும் இவ்வேளையில் அவர்களுக்கு நோய்அறிகுறிகள் (காய்ச்சல்இ இருமல் மூச்சுவிடுவதில் சிரமம்) தென்பட்டால் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நோய்பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது தற்போதைய சோதனை முறை.மேலும் ஆய்வகப்பரிசோதனையில் கோவிட்-19நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் அனைத்து நோய் அறிகுறி உள்ள தொடர்பாளர்கள் அனைத்து நோய் அறிகுறி உள்ள சுகாதாரப்பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடுமையான சுவாசநோய் காய்ச்சல் (காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சுத்திணறல்) உள்ள நோயாளிகள் மற்றும் நோய் உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்குத் தொடர்புடைய நோய் அறிகுறியற்ற நபர்கள் என அனைவரும் நோயாளியுடன் தொடர்பு வைத்திருந்த 5 முதல் 14 ஆம்நாட்களுக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.  இது கடுமையான சுவாசநோய்கள் மற்றும் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கோவிட்-19நோயாளிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தாத முந்தைய நிலையில் இருந்து சிறிய அளவில் மாறுதல்கொண்டது.
‘சோதனை சிகிச்சை மற்றும் அடையாளம்’ உலகசுகாதாரஅமைப்பின்  சமீபத்திய செய்திஒன்று “ஒவ்வொரு நாடும் நோய் அறிகுறி உள்ளவர்களை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்  சோதிக்கப்பட வேண்டும் சிகிச்சையளிக்கப்படவேண்டும் ”என்று கூறுகிறது. இதை இந்திய அரசாங்கம் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் இந்தியாவின் மோசமான சுகாதாரப்பாதுகாப்புமுறை மற்றும் உள்நாட்டு  உற்பத்தியின் சதவிகிதத்தைப் போலவே படுமோசமாக இருக்கும் பொதுசுகாதார செலவினங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கவலை எழுந்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் பொருளாதாரங்களில் மேம்பட்ட சுகாதார அமைப்புகள் மற்றும் சேவைகள் இருந்த போதிலும் கோவிட்-19  பாதிப்புகள் பெரிய அளவில் இருப்பதால் இந்தியாவின் சுகாதார சேவைகள் மற்றும் அமைப்புகளின் தயார்நிலை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட அளவிலான சோதனை வசதிகளை உறுதி செய்வது மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு அதிக பொருளாதார மற்றும் சமூக ஆதரவை உறுதி செய்வது என்பதற்கு பதில் அவற்றை விமர்சனம் செய்துவிட்டு சுய-மேலாண்மை  தனிமைப்படுத்தல்மற்றும் “உடல் ரீதியான தொலைவு”ஆகியவற்றின் மீது அதிககவனம் செலுத்துகிறது. மேலும் தொற்று நோய்பரவல்களைக் கண்டறிந்து பதிலளிப்பதற்காக 2004 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (ஐடிஎஸ்பி) செயல்திறன் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைப் பற்றி கட்டுரை எழுதிய சத்தீஸ்கரில் உள்ள கிராமப்புற பொதுசுகாதார மருத்துவர் யோகேஷ்ஜெயின் ஃப்ரன்ட்லைனுக்கு அளித்தபேட்டியில்  இங்கே நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கான அடையாளம் இல்லை என்பது நோய் பரவலே இல்லை என்பதற்கான அடையாளம் அல்ல என்று கூறினார். அதோடு பரிசோதனை செய்யப்படாத காரணத்தினால்தான் இந்தியா குறைவான நோய் பாதிப்பாளர்களைக் காட்டுகிறதுஎன்றுகூறியவர்  "இந்தியாவில் வேறு எந்தத் தொற்றுநோய் பரவலும் இல்லை என்பதால் சமூகபரவல் என்பது ஏற்கனவே நடக்கிறது. பெரிய சோதனை அளவுகோல்கள் இருக்க வேண்டும் என்பதோடு அதன் தரவுகள் மக்களுடன் பகிரப்பட வேண்டும். பிரத்தியேகமான இடங்களைத் தேர்வு செய்து அங்கிருந்து பரிசோதனை மாதிரிகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தது ஐ.சி.எம்.ஆர்.  ஆனால் அந்த வகையில் 10 மருத்துவமனைகள் தேர்வுசெய்யப்பட்டு  நிமோனியா பாதிக்கப்பட்ட அனைவரையும் பரிசோதனை செய்தாலும் கூடநோய் பரவல் பற்றி தோராயமான கணிப்பு தான் நமக்கு கிடைக்கும்.  நாம் ஐரோப்பாவின் நோய் பரவலாக்க வளைவுக்கு ஒன்று முதல் இரண்டு வாரங்கள் பின் தங்கி இருக்கிறோம் என்பதற்காகவே அங்கு பரவியதுபோல் இங்கும் பரவாது என்றுஅர்த்தமல்ல ”என்றார். மேலும் சமுதாய பரவல் இருந்தால் மட்டுமே அரசாங்கம் செயல்படும் என்ற உத்தி “முட்டாள் தனமானது”என்றவர்  சில நாடுகள் இன்னும் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று றுர்ழு மறைமுகமாக சுட்டிக்காட்டியதை நினைவு படுத்தினார்.
சோதனைக் கருவிகளின் பற்றாக்குறைதான் குறைந்த சோதனை விகிதத்திற்கு காரணம் என்று ஐ.சி.எம்.ஆர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் இது மிகவும் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பொதுசுகாதார வல்லுநர்களின் கருத்தாகும். ஐடிஎஸ்பியின்கீழ் 168 காய்ச்சல் பரிசோதனை மையங்கள் உள்ளன. உண்மையில் சமீபமாக அடிக்கடி வைரஸ் பரவல்கள் நிகழ்வதால் ஆரம்பகால வைரஸ் தொற்று நோய்களைக் கண்டறிய  சுகாதார ஆராய்ச்சித்துறை ஐ.சி.எம்.ஆரின் உதவியுடன் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகங்களை அமைத்தது. அந்தவகையில்இதுபோன்ற 85 ஆய்வகங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன  ஆனால் அவற்றில்  கோவிட்-19 பரிசோதனை செய்யப்படுகின்றனவா என்பது தெரியவில்லை. "அனைத்தும் இரகசியமாகவே இருக்குமானால்  மக்கள் எல்லா வகையான முடிவுகளுக்கும் வருவார்கள்" என்று ஜெயின் கூறினார்.
சீனாவின் வூஹான் நகரில் ஊரடங்கு உத்தரவு வெற்றியைத் தந்தது என்பதற்காக பன்முகப்படுத்தப்பட்ட மக்கள்தொகை நெருக்கம் அதிகம் உள்ள இந்தியாவில் சமூகவிலகளைக் கடைபிடிப்பது என்பது நடைமுறைக்கு உகந்தது  இல்லை.  "பொதுவாக இங்கே நோய் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்படும் மக்களும் அதுபற்றிக் கவலையின்றி சமூகத்தோடு கலந்துறவாடுவதைக் காண முடியும்". மேலும் வூஹானில் உள்ள அனைவரையும் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக கவனித்துக் கொள்வதையும் கூட சீன அரசாங்கம் உறுதிசெய்தது. அதனால் அவர்கள் வெளியேறவேண்டியதேவைஏற்படவில்லை. அடுத்து கோவிட்-19நோய் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 10 சதவிகிதம் பேராவது ஐ.சி.யூ மற்றும் வென்டிலேட்டரில் வைக்கப்பட வேண்டும் என்றார். ஆனால் வென்டிலேட்டர்கள் மற்றும் முழுமையாக பொருத்தப்பட்ட ஐ.சி.யுக்களின் பற்றாக்குறையும் இந்தியாவில் மிகப் பெரியசவாலாக இருக்கிறது.
சத்தீஸ்கரில் உள்ள 32 மில்லியன் மக்கள் தொகைக்கு 156 வென்டிலேட்டர்கள் இருக்கின்றன. அதாவது ஒவ்வொரு இரண்டு லட்சம் பேருக்கு ஒருவென்டிலேட்டர் என்று ஜெயின்கூறினார். மேலும் "பாதிப்பு ஒரு சதவீதமாக இருந்தால் கூட ஆயிரம் நபர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் அதோடு நூறு பேருக்கு வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படும். ஆனாலும் அப்போது கூடஒரு நபருக்கு மட்டுமே வென்டிலேட்டர் கிடைக்கும்" என்று அவர் கூறினார்.
சமீபத்தியஆண்டுகளில்  உலகளாவிய சுகாதார நிறுவனங்கள் தொற்று அல்லாத நோய்கள் மற்றும் புற்றுநோய்  நீரிழிவு நோய் மற்றும் நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் போன்ற வாழ்வியல் தொடர்பான நோய்களின் பக்கம் தனது கவனத்தை திசைதிருப்பி விட்டன. தற்போது தொற்று நோய்கள் தொற்று வைரஸ் பரவல்கள் வடிவில் மீண்டும் தோன்றுவது ஒரு புதிய சவாலாக உள்ளது. சுகாதார ஆராய்ச்சித்துறையின் அறிக்கையின்படி இந்தியாநிபா (2001, 2007 மற்றும் 2018)ஏவியன்இன்ஃப்ளூயன்ஸா ர்5N1 (2006)  சிக்குன்குனியா (2006) தொற்றுகாய்ச்சல் (2009), எபோலா  (2013 )  மற்றும் ஜிகா (2016) போன்றவைரஸ்பரவல்களையும், அவற்றின் சாத்தியமான ஊடுருவலின் அச்சுறுத்தல்களையும்எதிர்கொண்டது. 2020ஆம் ஆண்டளவில் அதிக முக்கியத்துவம் பெற்ற மாவட்டங்கள் சிலவற்றில் இந்திய பொதுசுகாதார நிர்ணய விதிமுறைகளின் படி துணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டிற்குள் பேரழிவு தரும் சுகாதார செலவினங்களை எதிர்கொள்ளும் குடும்பங்களின் விகிதத்தை 25 சதவீதம்குறைத்தல் உள்ளிட்ட பல இலக்குகளை அரசாங்கம் தாமாகவே நிர்ணயித்துள்ளது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு ஏற்றவாறு நாட்டின் சுகாதார செலவினங்களை தற்போதைய 1.15 சதவீதத்திலிருந்து 2025 க்குள் 2.5 சதவீதமாக உயர்த்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கோவிட்-19 பரவத் தொடங்கிய சூழலில் அமெரிக்காவும், யுனைடெட்கிங்டமும் தற்போது வென்டிலேட்டர்கள் மற்றும் ஐ.சி.யூ வசதிகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. அத்தியாவசிய சேவைகள் என்ற அடிப்படையில் உலகளாவிய சுகாதார பாதுகாப்பை மக்களுக்கு அதிகமாக ஏற்படுத்தியுள்ள நாடுகளும் இவைதான். 
யு.கே.யின் பிரதமர் போரிஸ்ஜான்சன் நோய்பாதிப்புக்குள்ளானதாக சந்தேகத்திற்கு உட்பட்ட நபர்களின் தொடர்புகளை அரசாங்கம் கண்டறிந்து பரிசோதனை செய்யப் போவதில்லை என்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுவார்கள் என்றும்கூறினார். ஆனால் ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் பாதிப்புகள் அதிகரித்ததால், அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டார். தொற்று நோய்களின் சவால் இந்தியாவில், தேசிய சுகாதார விவரக்குறிப்பு  2019 இன்படி, சராசரியாக அரசாங்க அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை என்பது  10,926 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் தான் உள்ளது.மேலும்சுமார் 8.6 லட்சம் துணை செவிலியர்கள் மற்றும் சுமார்  20 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் இருக்கின்றனர். 130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில்  25,778 அரசு மருத்துவமனைகள் மற்றும் 7,13,986 படுக்கைகள் மட்டுமே உள்ளன. தொற்றுநோய்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளை நிர்வகிப்பதற்கான நிதிநிலை அறிக்கை இதுவரை எந்தஆண்டிலும் ரூ .100 கோடியைத் தாண்டவில்லை. உண்மையில் 2016 முதல் இதுவரை ரூ .50 கோடி முதல் ரூ .60 கோடி வரை மட்டுமே உண்மையாக செலவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் அவசர மருத்துவ நிவாரணம் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுகாதாரத்துறை பேரழிவு முன்னேற்பாடுகள் மற்றும் அவற்றின் நிர்வாகத்திற்கான நிதி ஒதுக்கீடு என்பதும் கூட 2016-2017 ஆம் நிதியாண்டை விட 2018-2019 ஆம் நிதியாண்டில் பாதியாகக் குறைக்கப்பட்டது. (2016-17ல்ரூ .30 கோடி; 2018-19 ல் ரூ .16.85 கோடி).
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகையில் 8.3 சதவீதம் பேர் மட்டுமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 64.7 சதவீதம் பேர் 15-59 வயதுக்குட்பட்டவர்கள். வைரஸ் வயதானவர்களை மட்டுமே தாக்கும் என்ற அனுமானம் உண்மையல்ல. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30 சதவீத நோய் பாதிக்கப்பட்ட நபர்கள்  20-44 வயதுக்கு உட்பட்டவர்களே. இருப்பினும் இறப்புகள் விகிதம் வயதான வயதினரிடையேதான் அதிகமாக இருந்தன. 1990-லிருந்து 2016 வரை தொற்றுநோய்கள் தாய்வழி மரபுநோய்கள்  பிறந்த குழந்தைக்கான பாதிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் வரும் நோய்கள் 61 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்பதிலிருந்தும்  தொற்று அல்லாத நோய்கள்தான் என்.சி.டி) 30-லிருந்து 55 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது என அரசாங்கம் ஆறுதல் பெறக்கூடும். ஆனால் மாநிலங்களுக்கு இடையிலான தொற்று நோயியல் வேறுபாடுகள் தொற்று அல்லாத நோய்கள்  48 சதவீதம்முதல் 75 சதவீதம் வரையிலும் தொற்றுநோய்கள்  14 சதவீதம் முதல் 43 சதவீதம் வரையிலும் உள்ளன.
ஆனால்தேசியசுகாதாரசுயவிவரம் 2019 இன்படி தொற்று நோயின் காரணமாக வரும் கடுமையான சுவாச நோய்த் தொற்றுகள் மொத்த நோய்களில் கிட்டத்தட்ட 69.47 சதவீதமாக உள்ளன. மொத்த இறப்பு விகிதத்தில் நிமோனியா மற்றும் கடுமையான சுவாச நோய்த் தொற்றுகள் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம்  57.86 சதவீதமாக உள்ளது. 10.5 சதவிகிதம் என்ற அளவில் இறப்பு விகிதத்திற்கான மூன்றாவது மிக பெரிய காரணமாக கடுமையான வயிற்றுப்போக்கு உள்ளது.  2018 ஆம் ஆண்டில் மட்டும்  9.2 லட்சம் நிமோனியா நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதுவே அதற்கு முந்தைய ஆண்டு 7.5 லட்சம் என்றே இருந்தன. இதேபோல் ஹெபடைடிஸ்,  மூளைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான சுவாச நோய்த் தொற்றுகள் ஆகியவையும் அதற்கு முந்தைய ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் அதிகரித்தன.
சிகிச்சையாக ஊரடங்கு உத்தரவு ஆயினும் கூட இந்தியாவில் பாதிப்புகள் அதிகம் இல்லை என்ற மனநிறைவு கொள்ள வேண்டாம் என்று பொது சுகாதார வல்லுநர்கள் அரசாங்கத்தை எச்சரித்த போதிலும், அறிக்கையிடப்பட்டதைவிட அதிகமான பாதிப்புகள் இல்லை என்று மறுப்பது தொடர்கிறது. மேலும் வைரஸ் ஏற்கனவே சமூகத்திற்குள் ஊடுருவியிருக்கக் கூடிய இந்த நேரத்தில் “வருமுன் காப்பதே சிறந்தது”என்ற முறையை அரசாங்கம் பின்பற்றுவதாகத் தெரிகிறது. அதோடு தவறாமல் சோப்பினால் கைகளைக்கழுவுவது ஆல்கஹால் சார்ந்த கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது மற்றும் உடல் தொடர்புகளைத் தவிர்ப்பது போன்ற சில நடத்தை மற்றும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி பரவுவதைத் தடுக்க முடியும் என்று நோய்த் தடுப்பிற்கான முக்கியத்துவம் மற்றும் தொற்று நோயைத்தக்க வைத்துக் கொள்வதற்கான பொறுப்பு மக்களுக்கு மட்டுமே உள்ளதாக ஒரு கருத்தும் மக்கள் மீது தவறாகத் திணிக்கப்பட்டுள்ளது.
இந்தியசூழலில் மக்கள்தொகையில் பெரும்பகுதியை தனிமைப்படுத்துவது என்பது சாத்திய மற்றது குறிப்பாக கூலி வேலைக்கு வெளியே செல்ல வேண்டியவர்களைத் தனிமைப்படுத்துவது சாத்திய மற்றது.  வூஹானில் மக்கள் தங்கள் வீட்டு வாசலிலேயே உணவைப் பெறுவதை சீன அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனால் உடல் மற்றும் சமூகத் தொடர்புகளின் மூலம் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் அத்தகைய எந்தவித முயற்சியும் இந்தியாவில் இல்லை.
மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் மீண்டும் சோப்பினால் கைகளைக்கழுவவும் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தவும் குடிமக்களை அறிவுறுத்துவதில் காட்டுகிற அக்கறையை குடிக்க குளிக்க மற்றும் இதர சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்ய சுத்தமான தண்ணீரை அணுகும் சூழலை ஏற்படுத்துவதிலும் காட்டவேண்டும். தேசியசுகாதார விவரக்குறிப்பு 2018 இன்படிநாட்டில் 43.5 சதவீதகுடும்பங்களுக்குமட்டுமே குழாய் நீர் கிடைக்கிறது.  அதிலும் 32 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டுமேசுத்திகரிக்கப்பட்டதண்ணீர்கிடைக்கிறது.  சுமார் 33.5 சதவீத குடும்பங்கள்  கை விசை இயக்கக் குழாய்களை நம்பியுள்ளன . 11 சதவீதம் பேர் கிணற்று நீரை நம்பியிருக்கிறார்கள். அதில் 9 சதவீதம் பேர் மூடப்படாத திறந்த வெளிக்கிணறுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். 8.5 சதவீதம்பேர்ஆழ்துழைக்கிணறுகளைநம்பியுள்ளனர். 46.6 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே தங்கள் வளாகத்திற்குள் குடிநீர் கிடைக்கிறது. அதேநேரத்தில் 35.8 சதவீதம் பேருக்கு வீட்டிற்கு அருகிலும் 17.6 சதவீதம் பேருக்கு வீட்டிலிருந்து தொலைவிலும் குடிநீர் கிடைக்கிறது.
மாநிலங்களுக்கு இடையிலும் ஒரு பரந்துபட்ட மாறுபாடு காணப்படுகிறது. கேரளாவில் 77.7 சதவீத குடும்பங்கள் வளாகத்திற்குள் சுத்தமான குடிநீரைப் பெற்று வருகின்றனர். அதுவே சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த நிலை 26.5 சதவீதமாக இருக்கிறது.  பாதுகாப்பான குடிநீர் இல்லாமல்  10,379 கிராமப்புற வாழ்விடங்கள் இருக்கின்றன. மேலும்அவைஅனைத்தும்அதிகப்படியான ஃப்ளூரைடு அளவைக் கொண்டிருக்கின்றன.  16,279 வாழ்விடங்களின் குடிநீர் விநியோகத்தில் ஆர்சனிக் கலந்து இருக்கின்றன. 46.9 சதவீதவீடுகளில்மட்டுமேகழிவறைவசதிகள்இருக்கின்றனஇ 53.1 சதவீதம் பேரின்  வீட்டிற்குள் கழிவறைகள் இல்லை. மேலும் 48.9 சதவீதவீடுகளில் தேவையான வடிகால் இல்லை; 42 சதவீதம் பேருக்கு மட்டுமே குளியலறைகள் இருக்கின்றன; 55.8 சதவீதம் பேர் மட்டுமே வீட்டிற்குள் சமையலறைகளைக் கொண்டிருக்கின்றனர். அதிலும் 31.5 சதவீதம் பேர் வீட்டில் தனி சமையலறையே இல்லை.

ஆகையால் , சுத்தமான குடிநீருக்கான உத்தரவாதம் மிகக் குறைவாக உள்ள போது சோப்பு அல்லது கிருமிநாசினி மூலம் அடிக்கடி “கைகழுவுதல்”என்பது இந்திய சூழலில் ஒரு ஆடம்பரமாகும். கோவிட்-19 இன் பயம் அதிகரித்து வருவதால், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க பிரிவினரிடையே முகமூடிகள் மற்றும் கிருமி நாசினிகள் விற்பனை அதிகரித்துள்ளது.  மேலும் இந்தப் பொருட்களின் சில்லறை விற்பனையாளர்கள் பீதியால் பாதிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து அதிக அளவு வசூலிக்கத் தொடங்கி விட்டனர். ஊரடங்கால் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருக்கும் என்ற அச்சம் பலரை உணவு மற்றும் மருந்துகளை பதுக்கி வைக்கத் தூண்டியுள்ளது. இது கடைகளில் கடுமையான பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளது. காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. மார்ச் 21 அன்று, நுகர்வோர்விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகம் , இந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி சிலர் மட்டும் சுரண்டலில் ஈடுபடுவதைத் தாமதமாக உணர்ந்து  அத்தியாவசிய பொருட்கள் சட்டம்  1950 இன் கீழ் ஒரு உத்தரவைப் பிறப்பித்து, முகமூடிகள் மற்றும் கிருமி நாசினிகள் விலையை ஒழுங்குபடுத்தியது.  இரண்டு குறிப்பிட்ட வகை முகமூடிகளை ரூ .8 மற்றும் ரூ .10 க்கும் அதிகமாகவும், 200மில்லிபாட்டில் கிருமிநாசினிரூ .100க்கு அதிகமாகவும் விற்க சில்லறை விற்பனையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.   இந்தஅறிவிப்புஜூன் 30 வரைநடைமுறையில்இருக்கும். ஆயினும்இ இந்த விலைக் குறைப்பிற்கு பின்பும் கூட கிருமிநாசினி என்பது பலருக்கும் மலிவான பொருள் இல்லை. இவற்றை வாங்க முடியாதவர்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கத்திடமிருந்து எந்த உறுதிப்பாடும் வரவில்லை.
கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும்  இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரவிருக்கும் வாரங்களில் இன்னும் மிகப்பெரிய பேராபத்து இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  இதற்காக முற்றிலும் தனியார் மயமாக்கப்பட்ட இந்தியசுகாதார அமைப்பு எள்ளளவும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. பொது சுகாதாரத்தை கவனமாக கையாள்வதற்கும், அதில் முற்றிலும் தனியார் துறையைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், மக்களின் நலன்களுக்காக பொதுத்துறையில் மருத்துவத்தை பலப்படுத்துவதற்கும்,  அவற்றில் மறுமுதலீடு செய்வதற்கும் இந்த நோய் பரவல் மூலம் அரசாங்கம் பெற்றிருக்கும் ஒரு வாய்ப்பாகும்.
-நன்றி: பிரண்ட்லைன்
தமிழாக்கம்: பிரபு தமிழன்