tamilnadu

img

ஆபத்தான கல்விக் கொள்கை

மத்திய அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி விரிவான கடிதம் 

தமிழகத்தில் இன்று  ஒரு கோடி கையெழுத்து இயக்கம் துவங்குகிறது

சென்னை/ புதுதில்லி, ஜூலை 24 - மத்திய பாஜக அரசு வெளி யிட்டுள்ள தேசிய வரைவு கல்விக் கொள்கை முற்றிலும் ஆபத்தான அம்சங்களை கொண்டுள்ளது என்றும் இதை தற்போதைய அதே வடிவத்தில் ஏற்றுக் கொள்ள முடி யாது என்றும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்தும் அதில் உள்ள ஆபத்தான அம்சங்களை அம்பலப்படுத்தியும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளும் விதத்தில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் கையெழுத்து இயக்கமும் தெரு முனைப் பிரச்சார இயக்கமும் ஜூலை 25 (இன்று) துவங்குகிறது. தேசிய வரைவு கல்விக் கொள்கை யை வெளியிட்டுள்ள மத்திய பாஜக அரசு, ஜூலை 31க்குள் கருத்து தெரிவிக்குமாறு கெடு விதித்துள் ளது. இந்தியக் கல்வியை முற்றிலும்  சீர்குலைக்கும் இந்த வரைவு கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு இயக்கம் வலுத்து வருகிறது.

சீத்தாராம் யெச்சூரி கடிதம்

இந்நிலையில் தேசிய வரைவு கல்விக் கொள்கையின் பாதக அம்சங்களை விரிவாக விளக்கி, இக்கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த விரிவான கடிதக் குறிப்பில், “தேசிய வரைவு கல்விக் கொள்கை இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது. குறிப்பாக இந்த வரைவில் 23வது அத்தியாயம், கல்வி தொடர்பான மாநில அரசுகளின் அதிகாரங்கள் அனைத்தையும் பறித்து, மத்திய அரசிடம் குவிக்க வழி செய்கிறது. கூட்டாட்சி தத்துவம் என்ற அடிப்படை மாண்பு முற்றாக சிதை க்கப்படுகிறது. இந்த அத்தியாயம் உட்பட, வரைவுக் கொள்கை முழு வதும் இந்திய கல்வி முறை மற்றும் கட்டமைப்பை முற்றிலும் மத்திய மயமாக்குதல், வணிகமயமாக்குதல், மதவெறி மயமாக்குதல் ஆகிய மூன்று கடும் ஆபத்துகளுக்குள் தள்ளிவிடுவதாக அமைந்துள்ளது. தற்போதைய கல்வி முறையில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி, தரமான கல்வி, அனை வருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கும்  கல்வி என்ற வகையில் மாற்றங் களை செய்வதற்குப் பதிலாக முற்றிலும் பணம் படைத்தவர் களுக்கு மட்டுமே கல்வி; பெரும் கார்ப்ப ரேட் கம்பெனிகளின் லாப வேட்டைக் கான துறையாக மாற்றப்படும் கல்வி  என்ற இலக்கை பூர்த்தி செய்வ தாகவே வரைவுக் கொள்கை அமைந் துள்ளது. எனவே இதே வடிவத்தில் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. விரிவான, நாடு தழுவிய விவா தத்திற்கு இது உட்படுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பாக வரைவுக் கொள்கை யில் இடம்பெற்றுள்ள பாதக அம்சங் கள் அனைத்தையும் விரிவாக சுட்டிக் காட்டி, மாற்றுக் கொள்கையையும் முன்வைத்து சீத்தாராம் யெச்சூரி இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
இத்தகைய பின்னணியில் புதிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஜூலை  25 முதல் 30 வரை ஒரு கோடிப் பேரிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை யும் 5 ஆயிரம் இடங்களில் பிரச்சார கூட்டங்கள் நடத்தும் இயக்கத்தை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அந்த மாபெரும் இய க்கம் வியாழனன்று துவங்குகிறது.