tamilnadu

img

கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 22 பேர் மோடி அமைச்சரவை உள்ளனர்

மோடி அமைச்சரவையில் பங்கேற்றுள்ளவர்களில் 22 பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 
17வது மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றியடைந்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவருடன் அவரது தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 
இதையடுத்து  மோடி தலைமையிலான அமைச்சரவையில் பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மொத்தம் 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது.
அதில் 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 16 பேர் மீது கொலை முயற்சி, சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவித்தல், தேர்தல் விதிமீறல் போன்ற குற்றச்சாட்டுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அமைச்சரவையில் 51 பேர் கோடீஸ்வரர்கள்.  
அமித் ஷா, பியுஷ் கோயல், ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு அமைச்சருக்கு ரூ.14.72 கோடி சொத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு கோடிக்கு கீழ் சொத்து உள்ள அமைச்சர்கள் மொத்தம் 5 பேர் மட்டுமே உள்ளனர்.