tamilnadu

img

செல்போன் கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றும் ‘மாட்டுச்சாண’ சிப்... மத்திய பாஜக அரசின் கால்நடைத்துறை ‘கண்டுபிடிப்பு’...

புதுதில்லி:
மத்திய கால்நடைப் பராமரிப்பு மற்றும் வளர்ப்புத்துறையின் கீழ் இயங்கும் ‘ராஷ்டிரியகாமதேனு ஆயோக்’ அமைப்பு, ‘மாட்டுச்சாண’ சிப் (chip) ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த ‘மாட்டுச்சாண செல் போன் சிப்’, செல்போன் கதிர்வீச்சைக் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றும், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளதாகவும் ‘ராஷ்டிரிய காமதேனு ஆயோக்’கின் தலை வர் வல்லபாய் கத்திரியா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“மாட்டுச் சாணம் ஒவ்வொரு வரையும் காப்பாற்றக் கூடியது. வீட்டில் மாட்டுச் சாணத்தைவைத்தால், மக்கள் கதிர்வீச் சில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதேபோல மாட்டுச் சாணத்தால்செய்யப்பட்ட செல்போன்‘சிப்’ ஒன்று கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இது செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனிதரை தாக்காமல்பாதுகாக்கக் கூடியதாகும்.இந்த சிப்பை செல்போன் களில் பயன்படுத்தலாம். இதுநோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கக் கூடியதாகும்.மாட்டுச் சாணத்தால் ஆனஇந்த சிப்புக்கு ‘’கவ்சத்வகவாச்’’ என்று பெயரிடப்பட் டுள்ளது. கதிர்வீச்சினால் ஏற் படும் ஆபத்தில் இருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இந்த சிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.”இவ்வாறு கத்திரியா கூறியுள்ளார்.மாட்டு மூத்திரம் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல் லது என்று பாலிவுட் நடிகர் அக்சய் குமார் அண்மையில் கூறி இருந்ததை இந்த பேட்டியின்போது மேற்கோள் காட்டிய கத்திரியா, அக்சய் குமார் மாட்டு மூத்திரம் மட்டுமல்ல, மாட்டுச் சாணத்தையும்சாப்பிட்டு இருக்கிறார் என்றுபுதிய தகவலையும் வெளியிட்டார்.