tamilnadu

img

பிஎஸ்எப் வீரர்களையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்... 

தில்லி 
நாட்டின் எல்லைப்பாதுகாப்பு படை பிரிவான பிஎஸ்எப் அமைப்பை கொரோனா வைரஸ் தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வருகிறது. அவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தில்லி பிஎஸ்எப் படை பிரிவில் இன்று ஒரே நாளில் 53 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,018 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை தொடர்பான முழுவிபரம் இல்லை என்றாலும், 659 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 345 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

;