இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436 ஐ தாண்டியுள்ளது, உலகெங்கிலும் 145 நாடுகளில் 145,810 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்து உள்ளது. 67 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் என 85 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட 5பேருடனும் தொடர்புடைய 4 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் டெல்லியில் 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடைமுறை மார்ச் 16 ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.