tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்வு -6 பேர் பலி

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 50 பேருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. 
தமிழகத்தில் இதுவரை 91851 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அரசு கண்காணிப்பில் 205 பேர் உள்ளனர். இந்நிலையில் 28 நாள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 19060. 
 இதுவரை 5016 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.   இந்நிலையில் இன்று புதிதாக 50 பேருக்கு கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது.
இதில் தில்லி மாநாட்டில் பங்கேற்ற 1475 பேரில்  573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 855 பேருக்கு தொற்று இல்லை.  இந்நிலையில் நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயது பெண் ஒருவர் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று  மட்டும் புதிதாக சென்னையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஆக உள்ளது. மேலும் கோவையில் 59 பேருக்கு கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை செலவை  தமிழக அரசு ஏற்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் சிகிச்சை செலவை தமிழக அரசு ஏற்கும்.