இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் தில்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கெரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் மார்ச் 31 ம் தேதி வரை நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில் தலைநகர் தில்லியில் இன்று இரவு 9 மணி முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.