tamilnadu

img

நாகாலாந்து சென்ற 3 பேருக்கு கொரோனா

கோஹிமா:
சிக்கிமுக்குப் பிறகு திங்களன்று நாகாலாந்தில் முதன்முறையாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகாலாந்து சென்ற இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோருக்கு சோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.இந்தத்தகவலை அம் மாநில முதன்மை சுகாதாரச் செயலாளர் மேனுகோல் ஜான் தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்டவர்களில் இருவர் திமாபூரையும் ஒருவர் கொஹிமாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். கொரோனா பரவல் குறித்து யாரும்பீதியடைய வேண்டாமெனசிக்கிம் முதல்வர் நெபியுரியோ கேட்டுக்கொண்டுள் ளார்.

;