tamilnadu

img

கொரோனா பாதிப்பு.... குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுதில்லி:
கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 பேராக அதிகரித்துள்ளது. இந்த நோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி மீண்டவர்கள் எண்ணிக்கை வீதம் வெள்ளிக்கிழமையாக 13.06 ஆக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமையன்று 12.02 மற்றும் புதன்கிழமை 11.41 ஆக இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில், 260 நோயாளிகள் கொரோனா பாதிப்பில் இருந்து குணப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர்.  இது இந்தியாவில் இதுவரை மீட்கப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையாகும். வியாழக்கிழமை 183 பேர் குணமாகி வீடு திரும்பினர். மே முதல் வாரத்தில்  கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சத்தைத் தொடக்கூடும் என்றும் அதன் பிறகு இந்த எண்ணிக்கை குறையும் என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அடுத்த ஒரு வாரம் மிக முக்கியமானது. இந்தியா பரிசோதனையை அதிகரிக்கப் போகிறது. கடுமையான சுவாச நோய்த்தொற்று தொடர்பான அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் சோதனை செய்யப்படும் என்றார்.
 

;