tamilnadu

img

கொரோனா தாக்குதல் எதிரொலி.... தில்லி சிஆர்பிஎப் தலைமை அலுவலகத்திற்குச் சீல்

தில்லி 
இந்தியாவில் 2 கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட பொழுதிலும் இன்னும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை என்பதால், நாளையிலிருந்து 3-ஆம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இந்த ஊரடங்கு வரும் 17-ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கை 1,300-யை தண்டியுள்ள நிலையில்,  தில்லியில் சிஆர்பிஎப் ஜெனரல் ரேங்க் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தில்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டு அந்த அபாய பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிஆர்பிஎப் வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரர்களின் குடியிருப்பும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 

;