புதுதில்லி, மே 23- இந்தியாவில் வெள்ளி யன்று ஒரேநாளில் சோதிக்கப் பட்ட கொரோனா மாதிரி களின் எண்ணிக்கை 1 லட் சத்து 15 ஆயிரத்து 364 ஆகும். கொரோனா பாதிப்பு குறித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி, இந்தி யாவில் மொத்தம் 69,597 பாதிப்புகள் செயலில் உள் ளன. இறப்பு எண்ணிக்கை 3,720 ஆகும். இதுவரை 51,783 பேர் மீட்கப்பட்டுள்ள தாகவும் மீட்பு வீதம் சனிக்கி ழமை விபரப்படி 41.39 சதவீத மாகவும் இருந்தது.
மகாராஷ்டிரா மாநிலத் தில் 41 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பாதிப்படைந்து, முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 14,753 பேர், குஜராத்தில் 12,905 பேர், தில்லியில் 11,659 பேர் கொரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மருத்துவ ஆரா ய்ச்சிக் கவுன்சில் தகவ லின்படி சோதனை செய்யப் பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 28,34,798 ஆகும். 24 மணி நேரத்தில் சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 364 ஆகும்.