புதுதில்லி,மார்ச் 13- கேரளா, கர்நாடகா, ஆந் திராவைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் பாதிப்புக் குள்ளானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா வில் துவக்கத்தில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டாலும் கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரசுக்கு பலி யானார். 12 மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா வில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மிக அதிக மானோர் இருக்கிறார்கள். இதனால் இந்த மாநிலங்க ளில் கூடுதல் கவனம் செலுத் தப்படுகிறது. மார்ச் 12 காலை நில வரப்படி இந்தியா முழுவதும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது. ஆனால் மார்ச் 13 அன்று காலை கேரளா, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோ னா வைரஸ் பாதிப்பு ஏற் பட்டது. இதனால் கொரோ னா வைரஸ் பாதிப்புக்குள் ளானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் குணப்படுத்தக்கூடிய நோய் தான் என்று சர்வதேச அமைப்புகள் அறிவித்துள்ளன.உலக சுகாதார நிறுவனமும் தேவையான அறிவுரைக ளை வழங்கி வருகிறது. இந்தி யர்கள் அச்சமடைய தேவை யில்லை. அதுபற்றிய விழிப்பு ணர்வை புரிந்து கொண்டால் போதும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.