சென்னை:
கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் யூஜிசி பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்து, சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக, சென்னை பல்கலைக்கழக வரம்பிற்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் அரியர் தேர்வு ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் யுஜிசி வியாழனன்று பதில் மனு தாக்கல் செய்தது.அதில், ‘இறுதி பருவ மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை. இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது. செப்டம்பர் 30க்குள் இறுதி பருவத் தேர்வு நடத்தாவிட்டால் கால அவகாசத்தை நீட்டிக்க கோரலாம். இறுதி பருவ தேர்வை நடத்த எதிர்ப்பு
தெரிவித்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது’ என கூறி உள்ளது.