tamilnadu

img

நிலக்கரி சுரங்க முறைகேடு: முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை

நிலக்கரி சுரங்க முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலுப் ராய்க்கு 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலிப் ராய். இவர் ஜார்க்கண்ட் மாநிலம், கிரித் பகுதியில் உள்ள பிரம்மாதியா நிலக்கரி சுரங்கத்தை கேஸ்ட்ராஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு (சிடிஎஸ்) ஒதுக்கீடு செய்த வழக்கில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. கடந்த 1999-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்த திலிப் ராய் சிடிஎஸ் நிறுவனத்துக்கு விதிமுறைகளுக்கு புறம்பாக ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து தொடரப்பட்ட வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கு விசாரணையில் திலிப்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் திலீப்ராய்க்கு சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில்  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி பாரத் பராஷர் தீர்ப்பளித்தார். மேலும் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள்  பிரதீப் குமார் பானர்ஜி, நித்யானந்த் கவுதம், கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் மகேந்திர குமார் அக்ராவாலா ஆகியோருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.