புதுதில்லி:
கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா தேசியத் தலைமையின் நிலைப்பாட்டை பலமுறை மறுத்திருப்பது காங்கிரசில் புதிய பிளவுக்கு வழிவகுத்து வருகிறது. பாஜக மீது மென்மையான அணுகுமுறை கொண்டவர்கள், பாஜகவை எதிர்ப்பவர் கள் என்பதாக இந்த பிளவு ஏற்பட் டுள்ளது. எல்டிஎப் அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக பாஜகவுடன் கைகோர்க்க முயல் வதாக கேரளாவில் ஒரு பிரிவின் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு வலுவடைந்து வருகிறது.
பாஜகவைப் பின்பற்ற முயன்றால் காங்கிரஸ் பூஜ்ஜியமாகிவிடும் என்ற சசிதரூரின் கூற்று இந்த சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வங்காளத் தில் காங்கிரசுடன் யெச்சூரி ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார் என்று திருவனந்தபுரத்தில் சென்னித்தலா கூறியது காங்கிரஸ் தேசிய தலைமைக்கு ஒரு புதிய சவால். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும்பாஜகவால் கட்டவிழ்த்து விடப்பட்டபயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இடது முன்னணியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று காங்கிரஸ்-மேற்கு வங்க பிரிவு உறுதியாக உள்ளது. மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
இதைக் கருத்தில் கொண்டு, மேற்குவங்க தேர்தலுக்கு முன்னதாக அவர்அம்மாநில காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தேசியத் தலைமையின் இந்த நடவடிக்கைகளை சென்னித்தலா கேலி செய்கிறார்.ஏற்கனவே, விசாரணை அமைப்புகளை மத்திய அரசு அரசியல் ரீதியாக தவறாக பயன்படுத்துகிறது என்ற ராகுல் காந்தியின் அறிக்கையால் சென்னித்தலா கோபமடைந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்துஸ்தான் டைம்ஸில் எழுதிய கட்டுரையை எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக் கொள்ளவில்லை,
பாஜக தனது அதிகாரத்தை எதிர்க்கட்சியை வேட்டையாட பயன்படுத்துகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் கேள்விக் குறியாக்கும் மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் எதிரான வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று தேசியஅளவில் பல காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், பாஜகமீதான மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களைக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டை கேரள தலைவர்கள் எடுத்து வருகின்றனர்.