tamilnadu

img

சவுதாலா அறையில் செல்போன் 

புதுதில்லி:
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா,  ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் செய்ததாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, திகார் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சவுதாலா அடைக்கப்பட்டுள்ள சிறை அறைக்குள் இருந்து, ஒரு செல்போன், அதற்கான சார்ஜர் கருவி மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.