tamilnadu

மாநிலங்களுக்கு மத்திய அரசு  ரூ. 1.51 லட்சம் கோடி பாக்கி

2020-21இல் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை மொத்தமாக ரூ. 1 லட்சத்து 51 ஆயிரத்து 365 கோடியாக உள்ளது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ. 22 ஆயிரத்து 485 கோடி, கர்நாடகாவுக்கு ரூ. 13 ஆயிரத்து 763 கோடி, உத்தரப்பிரதேசத்திற்கு ரூ. 11 ஆயிரத்து 742 கோடி, குஜராத்துக்கு ரூ. 11 ஆயிரத்து 563 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ. 11 ஆயிரத்து 269 கோடி நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

;