சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கோவிட்-19 பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பள்ளிகள் மூடப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த சூழலில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுகள் நடைபெறும் அதே சமயத்தில், விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும், வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.