புதுதில்லி:
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. நாட்டின் பல்வேறு இடங்களிலும் ரயில் மறியல் உள்ளிட்ட எதிர்ப்பு போராட்டங்களும் நடந்தன. இதனைத் தொடர்ந்து இடதுசாரிகள், தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம், சத்தீஸ்கார் கிசான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின்சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்தியஅரசு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.