tamilnadu

img

மத்திய பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய செய்து வருகிறார். 
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

*  கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 சதவிகிதத்தில் இருந்து 48 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

* இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

* வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்சி செயல்படுத்தப்படும்

* தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.

* 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.

*  விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன்

*  வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். பால், பழங்கள், காய்கறிகளை கொண்டுச் செல்ல தனி ரயில் இயக்கப்படும். 2025ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக்க இலக்கு நிர்ணயம்.

* விவசாயத்துறைக்கு ரூ.2.83 கோடி லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* புதிய கல்விக் கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.

* கல்வித்துறைக்கு 99,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

* முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி பயன்று சான்றிதழ்கள் வழங்கும் திட்டம்செயல்படுத்தப்படும்.
* தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

* பிரதமரின்  ஜன் ஆரோக்கியா திட்டத்துக்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*  அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்ய மக்கள் மருந்தகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்.

*  திறன் மேம்பாட்டிற்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* உத்தரபிரதேசத்தில் போலீஸ் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

* ஜவுளித்துறைக்கு ரூ .1,480 கோடி ஒதுக்கீடு

* அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்படும்.

* சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

* தேசிய தரவரிசையில் 100 இடங்களுக்குள் உள்ள கல்வி நிறுவனங்கள் இணையவழிக் கல்வியை நடத்தலாம்.

* 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலான  ரயில் பாதைகள் மின் மயமாக்கப்படும் 

* சுற்றுலா தலங்களை இணைக்கம் வகையில் தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.

*  அரசு - தனியார் பங்களிப்புடன் 150 ரயில்களை இயக்க திட்டம்.

* பெங்களூருவில் ரூ.18,600 கோடி செலவில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும்.

* ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்ப்படும்.

* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு 22000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

*2024க்குள் 100  புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும் 

*நாடு முழுவதும் தகவல் சேவை பூங்கா 

* தேசிய எரிவாயு குழாய் தட திட்டம் 27 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்படும்.

* எரிவாயு குழாயை எடுத்துச் செல்லும் குழாய் வழித்தடங்கள் 16,200 கிலோ மீட்டர்  தொலைவுக்கு விரிவுபடுத்தப்படும்.

* மின்சாரத்தைக் கணக்கெடுக்கும் மின் மீட்டர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை.

* தனியார் சார்பில் தகவல் மைய பூங்காக்கள் அமைக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.

* ஒரு லட்சம் கிராமங்களை பாரத் நெட் திட்டம் மூலம் இணைக்க நடவடிக்கை. அதன்படி, 1 லட்சம் கிராமங்களுக்கு ஃபைபர் ஆப்டிகள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

* நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் சேமிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும். 

* ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தப்படும்.

* இந்திய பாரம்பரிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்கப்படும். 

* சுற்றுலா வளர்ச்சிக்காக மாநில அரசுகளுக்கு ரூ.2500 கோடி மானியம் வழங்கப்படும்

* தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சுற்றுலாத் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* ராஞ்சியில் பழங்குடியினருக்கான  அருங்காட்சியகம் அமைக்க முடிவு.

* 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. 65வது இடத்தில் இருந்து 34வதுஇடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

* இந்தியாவில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் தொல்லியல் துறை அகழாய்வுகள் மேம்படுத்தப்படும். 

*  கலாச்சார துறைக்கு ரூ. 3,150 கோடி ஒதுக்கீடு

* நகரங்களில் காற்று மாசை கட்டுப்படுத்த ரூ.4,400 கோடி ஒதுக்கீடு

* மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்த ஒரே முகமை அமைக்கப்படும்.

* பெண்கள் மேம்பாட்டிற்கு 28600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

* ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ 30,757 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* லடாக் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு ரூ.5958  கோடி ஒதுக்கீடு

* வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு ஏற்கனவே இருந்த  ரூ.1 லட்சம் காப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு

* ஜி 20 மாநாட்டிற்கு ரூ.100கோடி ஒதுக்கீடு

* பொதுத்துறை வங்கிகளுக்கு 

* 15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்  எல்ஐசியின் பங்குகள் தனியாருக்கு விற்பனை

* எல்ஐசியின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

* மத்திய அரசிடம் இருக்கும் ஐடிபிஐ வங்கிகளின் பங்குகளை விற்க திட்டம்

* பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ3.50 லட்சம் கோடி ஒதுக்கீடு

* 2020-21 ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காடாக உயரும் என்று நம்பிக்கை

* வரும் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 விழுக்காடு அதிகரிக்கும் என நம்பிக்கை

* வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.5 விழுக்காடாக இருக்கும் 

* ரூ. 5லட்சம் முதல் ரூ7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு  10 சதவிகிதமாக குறைப்பு

* ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 15 சதவிகிதமாக குறைப்பு

* ரூ10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு  வரி 20 சதவிகிதம் ஆக குறைப்பு

* 12 .5 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 25 சதவிகிதமாக குறைப்பு 

* 15 லட்சத்திற்கு மேலான வருமானத்திற்கு வரி 30 சதவிகிதமாக  தொடரும்.

* 12 .5 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு ரூ.78000 சேமிப்பு

* பிஎப், எல்ஐசி, பிரீமியம், வீட்டுகடன் வட்டி, சலுகைகளை பயன்படுத்தாவிட்டால் மட்டுமே வரிச்சலுகை

* ஏற்கனவே இருந்த வருமான வரி வரம்புகள் 3ல் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

 

 

 

;