tamilnadu

img

ரத்தம் சிந்தும் காஷ்மீர் - ம.கதிரேசன்

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்த பின்னர், எல்லாம் நன்றா கவே இருக்கிறது என நம்ப வைக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஸ்ரீநகர் முழுவதும் கம்பி முள்வேலிகள் விரித்த பகுதியாக மாறிவிட்டது. மோடி ,அஜித் தோவல் ஆகி யோர் ஜம்மு - காஷ்மீர் பிரச்சனையை இரண்டு விதங்களில் கையாளுகின்றனர். ஒன்று கடுமை யான அடக்குமுறை மூலம் உள்ளூர் தீவிரவாதி களை அழித்தொழித்தல் என்ற பெயரில் பேச்சு வார்த்தைகள், உரையாடல்கள் மூலம் சமாதான முயற்சிகளை மறுப்பது. ஏற்கனவே இது போன்ற கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன. இரண்டா வதாக மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள அங்கு மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களை கொண்டு வந்து மக்களின் வருமானத்தை அதிகப்படுத்த போவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அரசும் ஆளுநரும் கூறுவதென்ன?

முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை அவதூறு செய்து அவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் செயலில் அரசு ஈடுபடுகிறது. அமைதி யும் சுயாட்சியும் இல்லையெனில், தனிமைப் படுத்தப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு அரசு விடுக்கும் செய்திதான் என்ன? கடந்த ஒரு மாத காலமாக இரவுநேர ரெய்டுகளும், சட்ட விரோத தடுப்பு காவல்களும் தொடர்கின்றன. பொது பாது காப்பு சட்டத்தில் 4000 பேர் சட்ட விரோத தடுப்பு காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்களின் கதியை அறிய காவல் நிலையங்கள் முன்பு கவலை தோய்ந்த முகங்களுடன் பெற்றோர்கள் காத்துக் கிடக்கின்றனர். ராணுவ முகாம் வெளியே இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவசரகால மருந்துகள் இல்லை. இருக்கும் மருந்துகளும் வேகமாக காலியாகிக் கொண்டி ருக்கின்றன. சிசேரியன் செய்ய வேண்டிய ஒரு தாயின் கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போகிறது. ஆனால், அனுபவ மிக்க மூத்த மருத்துவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் கைபேசிகள் செயலி ழந்து கிடக்கின்றன.ஆளுநர் சத்யபால் மாலிக் என்ன சொல்லுகிறார்?  இங்கு யார் கைபேசிகளை யும், வலைத்தளங்களையும் பயன்படுத்துகிறார் கள்? தீவிரவாதிகளும் பாகிஸ்தானியர்களும் தான் அவைகளை பயன்படுத்துகின்றனர். அவை களால் எங்களுக்கு ஒரு பயனும் இல்லை. ஆனால்,மனித உரிமை கண்காணிப்பகம் என்ன சொல்கிறது. காஷ்மீரில் நீண்ட காலமாகவே வலைத்தளங்களும், தொலைத்தொடர்பு வசதி களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில மக்களுக்கு கடுமையான தீங்கை ஏற்படுத்தும்.எனவே உடனடியாக தொலைத்தொடர்பு சாத னங்களின் மீதான தடையை விலக்கிக்கொள்ள வேண்டும்.

இருள் மயமான எதிர்காலம்

மக்களின் கோபம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் ஊரடங்கு சட்டங்கள் அதிக ரிக்கின்றன. எதிர்காலம் இருள் மயமாக உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று  சுவரொட்டிகள் எச்சரிக்கின்றன.  பிரிவு 370 நீக் கத்தை எதிர்ப்பவர்களை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்று ஆளுநர் கூறுகிறார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ராகுல் காந்தி வயநாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவரது மனநிலை மாறி விட்டதாகக் கூறுகிறார்.

உயர்மட்ட அதிகாரத்தைக் கொண்டு ஜம்மு - காஷ்மீரை ராணுவம் மூலம் ஆட்சி செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு. ஆனால் 1990 -ஐ விட நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் சோர்வடையவில்லை. சந்தர்ப்பத்திற்காக காத்தி ருக்கின்றனர். வெளிநாடு செல்ல இருந்த போது கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஹவ் கேஸ் கிலானி என்பவர் தகவல் தொடர்பு செய்தி பரிமாற்றத்தில் வரலாறு காணாத ஒடுக்குமுறையை எதிர்கொள்வ தாக கூறுகிறார். இனிமேல் காஷ்மீர் மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்ள முந்தைய காலம் போன்று புறாக்கள் மூலம் தூதுவிடும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

நோயை விட மோசமான சிகிச்சை

ஜம்மு-காஷ்மீரின் அடுக்கடுக்கான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஜம்மு-காஷ்மீர் மறுசீர மைப்பு மசோதா சர்வரோக நிவாரணி அல்ல. இதன் மூலம் பிரச்சனைகளே மேலும் அதிகரித்துள்ளன. வடக்கு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளன. இன்றுள்ளது போன்றே நிரந்தர மாக பாதுகாப்பு படைகளை நிலை நிறுத்துவது நீண்ட கால நோக்கில் தாக்குப்பிடிக்க முடியாதது. சிறப்பு அந்தஸ்தை நீக்குவதன் மூலம் அபரிமிதமான வளர்ச்சி அடையும்; அதன்மூலமாக அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தலை குறைக்கலாம் என மோடி நியாயம் கற்பிக்கிறார். 50 ஆயிரம் வேலைகள் அடுத்த மூன்று மாதத்திற்குள் உருவாக்கப்படும் என்கிறார் ஆளுநர். 2016ஆம் ஆண்டில் 27 அர சுத்துறைகளில் 4,84,901 பேர் பணிபுரிந்தனர். ஜனவரி 2016 முதல் ஜனவரி 2019 வரை உள்ள காலத்தில் ஜம்மு-காஷ்மீரில் வேலையின்மை சராசரி 15 சதவீதம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.

அப்படியானால் மிக விரிவான அளவில் தனி யார் துறைகளை உள்ளடக்கி ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். புதிய சட்டம் இதற்கெல்லாம் வழிவகுக்கும் என்றெல்லாம் இப்போதே கூறிவிடமுடியாது. முதலில் வெளி நாட்டு மூலதனம் வருவது இருக்கட்டும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து உள்நாட்டு முதலீடு களே வருவது சந்தேகம்தான்.

1950கள் மற்றும் 1960களில் முகமது சாதிக் மற்றும் மீர் காசிம்  முதல்வர்களாக இருந்தபோது, மத்திய அரசு மிகப்பெரிய அளவில் பொருளாதார உதவிகளையும், திட்டங்களையும் வழங்கியது. ஆனால் அப்போதுதான் அங்கு ஊரடங்குகளும், எதிர்ப்புகளும் நிறைந்திருந்தன. 1975இல் இந்திரா காந்தி - ஷேக் அப்துல்லா ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் ஷேக் அப்துல்லா முதல்வரானார். அவர் ஜம்மு - காஷ்மீர் மக்களின் சுய கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதால் மத்திய அரசின் அரிசிக்கான மானியத்தைக் கூட மறுத்தார். அவர் 1982-ல் இறக்கும்வரை அரசியல் செல்வாக்குடனும் மிகுந்த புகழுடனும் முதல்வராக விளங்கினார். காஷ்மீர் பார்த்த மிக அமைதியான காலம் இதுவே. ஷீலா ரஷித் என்பவர் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்க கட்சியின் தலைவர். அவர் பாஜக நாடு முழு வதிலும் தனது ஒற்றை ஆட்சி பற்றிய கனவில் மிதக்கிறது என்கிறார். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு, ஜம்மு - காஷ்மீரின் 370 ஆவதுபிரிவு ரத்து தவிர மற்ற மாநிலங்களில் இந்துக்கள் வாக்கு களை ஒருமுகப்படுத்தியும், முஸ்லிம்களின் வாக்கு களை பொருட்படுத்த வேண்டாதவையாக மாற்றி யும் தனது ஒற்றை கட்சி ஆட்சியை நிறுவிட முயற்சிக்கிறது.

சோதனையில் உச்சநீதிமன்றம்

அலிம் சையத் என்பவர் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர். இவர் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெற்று காஷ்மீர் சென்று தனது பெற்றோரை பார்த்து வந்துள்ளார். காஷ்மீர் செல்ல ‘அனுமதிக்கப்படுதல்’ என்பதே அச்சத்தை ஏற்படுத்துவதாக அரசியல் சட்ட வல்லு நர்கள் கூறுகின்றனர். ஒருவரை ஜம்மு - காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதிப்பது என்பது நீதி மன்றம் அனுமதித்தாலன்றி ஒருவர் ஜம்மு-காஷ்மீர் செல்லமுடியாது என்று எண்ணுவதற்கு வழி வகுக்காதா எனக் கேட்கின்றனர்.

மத்திய அரசு அரசியல் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை உச்சநீதிமன்றம் விசாரிக்க ஆரம்பித்து விட்டது. இதன் மூலம் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவும் மீடியாக்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளவும் உத்தரவிடுவதற்கு தனது விருப்ப மின்மையை உணர்த்திவிட்டது உச்சநீதிமன்றம். இதன் மூலம் மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறி விட்டது.

370  நீக்கத்தை எதிர்த்து நடைபெறும் வழக்கில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இருவரும் உச்சநீதிமன்றத்திடம் விசித்திரமான கோரிக்கையை முன்வைத்தனர். இந்த வழக்கில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பக் கூடாது என்றனர். ஒரு வழக்கில் முதலில் எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்புவதே முக்கியமான சட்டப்பூர்வ முன் நிபந்த னையாகும்.  நோட்டீஸ் அனுப்பக் கூடாது என்பதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: இதன் மூலம் சர்வதேச அளவில் தாக்கங்கள் ஏற்படும். பாகிஸ்தான் இப்பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அமைப்பு வரை கொண்டு செல்லும். மத்திய அரசின் சட்ட அலுவலர்கள் நீதிமன்றத்தில் உள்ள தால், எதிர் மனுதாரரான மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் சட்டரீதியான சம்பிரதாயங்கள் வேண்டியதில்லை என்று வாதிட்டனர்.

உச்சநீதிமன்றம் தடுப்புக் காவல் கைதுகள் சட்டப்பூர்வமானதா என அரசைக் கேட்பதற்கு பதிலாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் முகமது அலீம் சையத் ஆகிய இருவரையும் மிகவும் பெருந் தன்மையோடு(!) காவல்துறை பாதுகாப்புடன் ஜம்மு - காஷ்மீர் செல்ல அனுமதி அனுமதித்தது.  உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் இவ்வாறு குறிப்பிட்டது :”மனுதாரர்  சீத்தாராம் யெச்சூரி அவரது நண்பரும் ,கட்சித் தோழருமான யூசுப் தாரிகாமியை   சந்தித்தல், உடல் நலம் விசாரித்தல் தவிர வேறு ஏதேனும் செயலில் ஈடுபட்டால் அது இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறியதாகும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்”. அதுபோன்றே முகமது அலி கிலானி காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள தனது பெற்றோ ரை சந்தித்து அவர்களின் உடல்நலத்தை பார்த்த பின்னர் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விபரம் தெரிவிக்குமாறு உத்தரவிட்டது .

இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளில் முதலிடம் பெற்ற ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த  ஃபசல் தனது பதவியை ராஜினாமா செய்தவர் .ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக இயக்கம்(JKPM) எனும் அரசியல் கட்சியை தொடங்கியவர் . இவர் அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் உயர்கல்வி படிக்க பயணம் செல்லவிருந்த போது தில்லியில் கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் கொண்டு வரப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் . ஜம்மு -காஷ்மீர் உயர்நீதிமன்றம் செயல்பா டின்றி இருப்பதால்  தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடுக்கப்பட்டது.தில்லி உயர்நீதிமன்றம் இது விஷயத்தில் அவசரம் ஏதும் காட்டவில்லை.

முடங்கிய ஊடகங்கள்

 அனுராதா பாசின், காஷ்மீர் டைம்ஸ் எனும் ஆங்கில நாளிதழ் ஆசிரியராவார். ஜம்மு-காஷ்மீ ரில் இப்பத்திரிகை அதிக அளவில் விற்பனையா கும் (3.50 லட்சம் பிரதிகள்) நாளிதழ் ஆகும் . 144 ஊரடங்கு உத்தரவுகள், குற்றவியல் நடை முறைச் சட்டங்கள்,  காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு  படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது போன்றவை களால் பத்திரிகையாளர்கள் களத்தில் சென்று செய்தி சேகரிக்க முடியவில்லை .

அரசு, பத்திரிகைகள் மீது வெளிப்படையாக தடை யேதும் விதிக்காவிட்டாலும் கூட ஊடகவிய லாளர்கள் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. ஜம்மு -காஷ்மீர் மீதான முற்றுகையின் காரண மாக மற்ற பத்திரிகைகள் போன்றே காஷ்மீர் டைம்ஸ் நாளிதழும் அச்சிடுதல், வெளியிடுதல், விநியோகம் உள்ளிட்ட எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. சில பத்திரிகைகள் தங்கள் பத்திரிகையின் பக்கங்களையும் வெளியிடும் பிரதிகளையும் குறைத்துக்கொண்டு மிகுந்த சவால்களுக்கு மத்தியில் பத்திரிகை நடத்தும் துணிகர முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர்.

வலைத்தளம், தொலைத்தொடர்பு மீதான  தடைகளை தளர்த்தவும் -காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் அரசியல் சட்டம் வழங்கியுள்ள தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை பயன்படுத்தவும்- அனைத்து ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான நிலைமையை உருவாக்கவும் உச்சநீதிமன்றத்தில் அனுராதா பாசின் வழக்கு தொடுத்துள்ளார். அரசின் தடுப்புக் காவல்களும் ,தகவல் தொடர்பு முடக்கமும் இன்னும் பல நடவடிக்கை களும் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அந்த அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியும் ,உள வியல் ரீதியான துன்பமும், மனிதாபிமான நெருக்கடிகளும் அதிகரிக்கும். இவ்வளவு பெரு மளவில் காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்படுவது பாகிஸ்தானுக்கு நல்ல அறுவடையாகும். 

மக்களுக்கு நம்பகத்தன்மையான செய்திக ளேதும் கிடைக்கவில்லை.டிஷ் ஆண்டெனா வைத்துள்ளவர்கள் மட்டும் தொலைக்காட்சி செய்தி களைக் கேட்கின்றனர்.அவைகளும் காஷ்மீரிக ளுக்கு எதிராக விசம் கக்குகின்றன.பொய்களைப் பரப்புகின்றன.அரசின் கடுமையான ஒடுக்குமுறை கள் காஷ்மீரிகளை சோர்வடையச் செய்யலாம்.ஆனால், சோர்வு நீங்கியதும் அங்கு வெடித்துக் கிளம்பும் கிளர்ச்சிகள் மிக மிக ஆபத்தானவை.

ஆதாரம்: ஃப்ரண்ட்லைன் செப்.27,2019