tamilnadu

img

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து  வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம்  செந்தில் வாசன்  மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. 
கந்தர் சஷ்டி கவசத்தை விமர்சித்து கறுப்பர் கூட்ட யூட்டியூப் சேனலில் வீடியோ ஒன்று வெளியானது. இதைத்தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை கோரி இந்து  மதவெறி அமைப்புகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தன. அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் (49) என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திரன் புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இவர்கள் இருவரையும் ஜூலை 30ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது. இந்நிலையில் செந்தில் வாசன் என்பவர் மீதும் இன்று  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.