tamilnadu

img

காவல்துறை பறிமுதல் செய்த பணத்தை பிடுங்கி சென்ற பாஜக தொண்டர்கள்

தெலுங்கானாவில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் பறிமுதல் செய்த பணத்தை பாஜக தொண்டர்கள் பிடுங்கி  சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தெலுங்கானா மாநிலம் துப்பக் தொகுதியிலும் தற்போது இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவ் என்பவரிடம் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர்.
இந்த தொகுதிக்குட்பட்ட சித்திப்பேட் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.18.67 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.  அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு வில் பாஜக தொண்டர்கள் சுமார் ரூ.12 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை காவல்துறையிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓடி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.