ஸ்ரீநகர்:
அரசியல் ரீதியான போரில், பரூக் அப்துல்லாவிடம் மோதி தோற்றுப் போன மத்திய பாஜக தற்போது, அவரை சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புக்கள் மூலம் பழிவாங்க பார்க்கிறது என்று தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்கத் துக்கு (JKCA) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நிதி உதவி வழங்கி வந்தது. கடந்த 2005-2006நிதியாண்டு முதல் 2011-2012 நிதியாண்டு வரை ரூ. 94 கோடியே 6 லட் சத்தை கிரிக்கெட் வாரியம் அளித்தது.இந்த பணத்தில் ரூ. 43 கோடியே 69 லட்சம் கையாடல் நடந்ததாக ஜம்மு- காஷ்மீர் கிரிக்கெட் சங்க பொதுச்செயலாளர் முகமது சலீம் கான், பொருளாளர் அஹ்சன் அகமது மிஸ்ரா மற்றும்அந்த சங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னர், தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி.உள்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து, அமலாக்கத்துறையினரும் பணமோசடி தடுப்பு (Prevention of Money Laundering Act - PMLA) சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில்தான், தேசியமாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவை திங்கட் கிழமையன்று அமலாக்கத்துறை நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளது.இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சிகண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.“அரசியல்ரீதியாக நடந்த போரில் பரூக் அப்துல்லாவிடம் பாஜக தோற்றுவிட்டது.
அதனால், இப்போது விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக அரசு அவரை குறிவைக்கிறது குப்கார்தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணியில் ஜம்மு - காஷ்மீரில் அனைத்துக் கட்சிகளையும் திரட்டும் பரூக் அப்துல்லாவின் முயற்சிக்கு எதிர்வினையாகவே அமலாக்கப் பிரிவு இந்தச் சம்மனை அனுப்பியுள்ளது.பாஜகவின் சித்தாந்தங்கள், பிரிவினைவாத அரசியலை எதிர்ப்பவர் களுக்குக் கிடைக்கும் ‘பரிசு’ இதுதான். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைத் தம்மிடம் பணிய வைப்பதற்காக பல்வேறு துறைகள் மூலம் பாஜக அரசு அச்சுறுத்திய சம்பவங்கள் கடந்த கால வரலாற்றில் நடந்தது. அதில் ஒருபகுதிதான் அமலாக்கப் பிரிவின் சம்மன்.இந்த சம்மனை அனுப்பிய நேரம் தெளிவாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, அதாவது பாஜக அரசு 370-வது பிரிவை ரத்து செய்த அன்று இதேபோன்று அமலாக்கப் பிரிவு பரூக் அப்துல்லாவுக்குச் சம்மன்அனுப்பியது. தற்போது குப்கர் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணியை பரூக் அப்துல்லா அமைத்த சில நாட்களில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள் ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும், “பரூக் அப்துல்லா குற்றமற்றவர். அவர் விசாரணை அமைப்புகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவார்” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்குமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியும் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.“ஜம்மு - காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு ஒற்றுமையாகி விட்டதால், மத்திய அரசு அச்சமடைந்து, பதற்றப் பட்டு, பரூக் அப்துல்லாவுக்கு உடனடியாக அமலாக்கப்பிரிவு மூலம் சம்மன் அனுப்பியுள்ளது. அரசியல்ரீதியாக பழிவாங்கும் இந்தச் செயல், எங்கள்உரிமைக்காக நடக்கும் போராட்டத்தில்எங்கள் தீர்மானத்தை மழுங்கடிக்காது”என்று மெகபூபா குறிப்பிட்டுள்ளார்.