tamilnadu

img

ஜார்கண்டில் தோல்வி முகத்தில் பாஜக


ஜார்கண்டில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது. 
81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத வாக்குகள் பதிவாகின. 
இதைத்தொடர்ந்து  பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.  இந்நிலையில் ஆளும் பாஜக தற்போது தோல்வி முகத்தில் உள்ளது.
12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகள் 42 இடங்களில் முன்னிலையிலும் பாஜக 29 இடங்களில் முன்னிலையிலும் உள்ளன. பிறகட்சிகள்10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.