tamilnadu

img

திரிணாமுலை தோற்கடிக்காமல் பாஜகவை தடுக்க முடியாது: யெச்சூரி....

புதுதில்லி:
திரிணாமுல் காங்கிரஸை தோற்கடிக்காமல் மேற்கு வங்கத்தில் பாஜகவை தடுக்க முடியாது என்று சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

டிஎம்சிக்கு எதிராக வலுவான அரசாங்க விரோத உணர்வு மக்களிடம் உள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்தி, மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. பாஜகவுக்கான வாகனமாக திரிணாமுல் விளங்கியது. டிஎம்சி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை அதிகப்படுத்த மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணியுடன் ஒரு உடன்பாட்டை எட்ட முடிவு செய்யப்பட்டது. அரசியலமைப்பைத் தகர்த்தெறிய முயற்சிக்கும் பாஜகவைத் தோற்கடிப்பது கட்டாயமாகும். பாஜக அரசில் மம்தா பானர்ஜி அமைச்சராக இருந்தார் என்பதை யெச்சூரி சுட்டிக்காட்டினார்.