tamilnadu

img

பீகார் தேர்தல் அறிவிப்பு

புதுதில்லி:
பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா புதுதில்லியில் வெள்ளியன்று அறிவித்தார்.

முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதிதேர்தல் நடைபெறும். இரண்டாவது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதியும், மூன்றாவது கட்டமாக78 தொகுதிகளுக்கு நவம்பர் 7 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் . வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்றுமுடிவுகள் அறிவிக்கப்படும். மாநிலத்தில் தற்போதிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. 7 லட்சம் சானிட்டைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.), 6.7 லட்சம் முகக் கவசங்கள்,23 லட்சம் (ஜோடி) கையுறைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள என்று அவர் கூறினார்.

;